Kanyakumari

News August 12, 2025

நாகர்கோவிலில் 4850 கிலோ மஞ்சள் ஏலம்

image

குமரி மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு – நித்திரவிளை காவல் நிலைய குற்ற வழக்கின் சொத்தான 4850 கிலோ மஞ்சள் இன்று (ஆக.12 ) காலை 11 மணிக்கு ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொது ஏலம் விடப்படுகிறது. பொது இடத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் ஏல முன்தொகை 500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த நபர்கள் ஏலத் தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து பணமாகச் செலுத்த வேண்டும் .

News August 11, 2025

குமரி மாவட்ட குறைதீர் நாள் நிகழ்ச்சியில் 285 மனுக்கள்

image

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 285 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News August 11, 2025

குமரி மாவட்டத்தில் தொழில் தொடங்க பயிற்சி

image

குமரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை, கால்நடை வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வமுள்ள உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க

News August 11, 2025

குமரி: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி – ஆட்சியர்!

image

குமரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி ஆகஸ்ட்.22ம் தேதி முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க http://sdat.tn.gov.in (0) http://cmtrophy.sdat.in இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள்: ஆக.16. மேலும் இப்போட்டியில் இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும் என தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

குமரி: உங்க வீட்ல கரண்ட் போயிட்டா? இதை பண்ணுங்க…

image

குமரி மக்களே, மழைக்காலத்தில் உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது? என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே Whatsapp மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், CALL செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க நண்பர்களே…

News August 11, 2025

குமரி மக்களே… இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <>இங்கு க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த SHARE பண்ணுங்க..

News August 10, 2025

குமரி: ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

image

குமரி மக்களே!
1. <>இங்கு க்ளிக் செய்து<<>> ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!

News August 10, 2025

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஹிம்லர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக இன்று அறிவித்தார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஹிம்லர் ஆரம்ப காலம் தொட்டே நாம் தமிழர் கட்சியில் முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். இவர் சிறந்த பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2025

குமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

தமிழ்நாடு தனியார் வேலை இணையம் சார்பில் கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Duty Manager பிரிவில் 50 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 8-35 வயதிற்குட்பட்ட ஆண்கள் பங்கேற்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 10, 2025

திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை

image

ஆக.10 திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் இந்த ரயில் வரும் நிலையிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பகல் நேரங்களில் ரயில் போக்குவரத்து இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!