India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)-ல் 120 கிரேட் பி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்த நபர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சம்பளம் 55,200 – 99,750 வரை வழங்கபடுகிறது. செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இங்கு <
கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. எனவே கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் அணுகு சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
குமரி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.
அருமனையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன நிர்வாக இயக்குநர்கள் லிபோரியா (60), சார்லஸ் (57), ராபின் ஜோஸ் (47 ) மற்றும் மேலாளர் அனிஷா (32) ஆகிய 4 பேரை நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அருமனை நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் நாகர்கோவில் ஒழுகினச்சேரியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு கொடுக்கலாம். இதுபோன்று நகை மற்றும் பணம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக, நிலம் தருவதாக மற்றும் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கூறியுள்ளார்.
குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இந்தியாவிலேயே சிறந்தவர்கள். இவர்களின் மீன்பிடி நுட்பங்கள், பல நாட்கள் கடலிலேயே தங்கி ஆழ்கடல் மீன்களை பிடிக்கும் வல்லமை ஆகியவை தனித்துவமானவை. டூனா, சுறா, மத்தி போன்ற பல்வேறு மீன் வகைகளைப் பிடித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றது. இது குமரி மாவட்ட மக்களின் ஒரு அரிய திறமை.
ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம் ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரி சங்கங்கள் இணைந்து நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
குமரியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 10ம் தேதிக்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கவனம் – கோட்டையம் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழிதடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 20ம் தேதி மாலை 5:20 மணிக்கு புறப்படுவது ஆலப்புழா வழியாக செல்லும். சிங்களூர் கோட்டயம் செல்லாது நாகர்கோவில் கோட்டயம் ரயில். இம்மாதம் 20ம் தேதி புறப்படுவது சங்கனாச்சேரி கோட்டயம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.