India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நீர்நிலைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு குமரி மாவட்டத்தில் ஏப்.29,30 தேதிகளில் நடக்கிறது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்று அதில் அவர் கூறி உள்ளார். *ஷேர்
பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, மூள்ளுர்துறை கிராமத்தை சேர்ந்த செல்வன். செ. தர்ஷன் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கருப்பு பெல்ட் (Black belt), ஒரு நிமிடத்தில் 10 விரல்கள் மூலம் 57 புஸ்அப்ஸ் (Push Ups) செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். அவரை ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டினார்.
தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் ஆகிய பகுதிகளை தலைமையிடமாககொண்டு நெடுஞ்சாலை ரோந்து படை செயல்படுகிறது. காவல் நிலையம் நெடுஞ்சாலை ரோந்து ஆயுதப்படை என 69 போலீசார் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீசார் 47 பேர் என நேற்று ஒரே நாளில் 116 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நாகர்கோவில் பயோனியார் குமாரசாமி கல்லூரியில் நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை அளிக்க இருக்கிறார்கள். *உங்களது மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்*
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பு சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் பருவ கன்னிப்பூ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 93 மெட்ரிக் டன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் நேற்று கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க எஸ்பி தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று எச்சரித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 120 அங்கன்வாடி பணியாளர்கள், 2குறு அங்கன்வாடி பணியாளர், 11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பித்து புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையினை 30 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் அழகுமீனா அதில் கேட்டுக்கொண்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்தை ஒப்பிடு கையில் இந்த ஆண்டின் கடந்த நான்கு மாதங்களில் கொலை, கொள்ளை மற்றும் விபத்து உயிரிழப்புகள் 60% குறைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நேற்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.