Kanyakumari

News September 14, 2025

குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

குமரி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

குமரி: உங்க பெயர்ல இத்தனை SIM -ஆ??

image

குமரி மக்களே உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை SIMகள் இருக்குன்னு சந்தேகம் உள்ளதா?? அதை எப்படி பார்க்கிறன்னு தெரியலையா? மத்திய அரசின் சஞ்சார்சாதி மூலம் உங்க ஆதார் எண் மூலம் எத்தனை SIMகள் உள்ளதுன்னு. இங்கு<> கிளிக்<<>> செய்து தெரிஞ்சுக்கோங்க… உங்க ஆதார் எண்ணுடன் உங்க அனுமதியின்றி வேறு எண்கள் வாங்கபட்டு இருந்தா இதிலே DEACTIVATE பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News September 14, 2025

குமரி அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்!

image

குமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வின்சென்ட்-கெர்லின் ஜெர்மன் தம்பதி இவர்கள்து பேரனுக்கு உடல் நலம் பாதிக்கபட்டது. எனவே சிகிச்சைக்காக கெர்லின் ஜெர்மன் பேரனுடன் கருங்கல் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8.75 பவுன் நகையை திருடியுள்ளனர்.இதுக்குறித்து கெர்லின் ஜெர்மன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்த விசாரணை.

News September 14, 2025

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10 கோடி இழப்பீடு

image

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் காசோலை குற்ற வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் மற்றும் குடும்பத்த தகராறு வழக்குகள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நீதிமன்றத்தின் மூலம் பரிசீலிக்கப்பட்ட 2519 வழக்குகளில் 1839 வழக்குகள் தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக குமரி சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

News September 13, 2025

குமரி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

image

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <>இங்கே கிளிக் செய்து<<>> கொள்ளலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 13, 2025

குமரி: வாகன விபத்து 13.60 லட்சம் காசோலை வழங்கல்

image

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றத் தொடக்க விழா மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிபதிகளான சுந்தரய்யா, செல்வகுமார், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் செல்வன் ஜேசு ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கமாக மோட்டார் வாகன இழப்பீடு சம்பந்தமான இரண்டு வழக்குகளுக்கு 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கபட்டது.

News September 13, 2025

குமரியில் நாளை மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

image

நாளை (14ம் தேதி) தென் மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கன்னியாகுமரி நெல்லை மாவட்டங்களை ஒன்றி உள்ள கேரள பகுதி தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

News September 13, 2025

குமரி: உங்க நீதிமன்ற CASE நிலை என்னனு தெரியலையா??

image

குமரி மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட்க்கு அலையுறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News September 13, 2025

குமரி: ரேஷன் கார்டு பிரச்னைகளை தீர்க்க இன்று முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட செயல்பாட்டை களைவதற்காக சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று (செப்.13)  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை  நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றம் உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார். 

News September 13, 2025

குமரி: வலையில் சிக்கிய மருத்துவகுண மீன்கள்

image

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலில் மீன்பிடித்த மீனவர்களின் வலையில் அதிக அளவில் அயலை மீன்கள் சிக்கின. வழக்கமாக 2500 முதல் 3000 வரை விலை போகும் ஒரு பெட்டி மீன்கள் நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆனதால் மீனவர்கள் வருத்தம் அடைந்தனர்.

error: Content is protected !!