India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 87ஆவது திவ்யதேசம். 16,008 சாளக்கிராமத்தால் ஆன பெருமாள், மேற்கு நோக்கி 22 அடியில் அருள்பாலிக்கிறார். இங்கு 12 சிவன் கோயில்களையும் தரிசித்து, பெருமாளையும் வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. வேண்டிய பலன்களைத் தரும் பெருமாள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பு. இதை *SHARE* பண்ணுங்க.
புதிய வழித்தட பேருந்துகள் விவரம்:
38A நாகர்கோவில்-புத்தன்துறை, 15L நாகர்கோவில்-யாக்கோபுரம், 15V நாகர்கோவில்-வடக்கன்குளம், 4BV நாகர்கோவில்-காற்றாடிவிளை, 38P நாகர்கோவில்-பிலாவிளை, 14E/V நாகர்கோவில்-முட்டம், 4H நாகர்கோவில்-திடல், 33C நாகர்கோவில்-கண்ணன்பதி, 4N நாகர்கோவில்-சுருளகோடு, 5/A நாகர்கோவில்-குளச்சல், 5D/PHS நாகர்கோவில்-வாணியாகுடி, 3 நாகர்கோவில்- கண்ணன்குளம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றது. இதில் ஒன்பதாயிரத்திற்கும் மேலான பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.
குமரி மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் ஆணையர் நிர்மல் ராஜ் பேசும் போது கைவினை தொழிலாளர்களுக்கு மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்படுகிறது என்றார். இதில் அதிகபட்சம் ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படும் என்றார்.
பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்பு பெற்று பணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு மறு இணைப்பு வழங்குவதற்கான மேளா ஜூலை.9 அன்று நாகர்கோவில் கோர்ட் ரோடு பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் பாக்கியை தள்ளுபடியுடன் செலுத்தி மறு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் “மினி டைடல் பார்க்” அமைப்பதற்காக
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் MR காந்தி தமிழக சட்டமன்றத்தில்
21-03-2025 அன்று கோரிக்கை வைத்தார். அதை தமிழக அரசு பரிசீலனை செய்து அதற்கான ஒப்புதல்களை இன்று வழங்கி இருக்கிறது. இதைஅடுத்து எம்.ஆர்.காந்திக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
திருவட்டார் முதுநிலை ஆய்வாளர் சாந்தி தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும் நாகர்கோவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அருள் கல்குளம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் ஆட்சியர் அலுவலக ஐ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபா இ பிரிவு தலைமை உதவியாளராகவும் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 7 பேர் வருவாய் ஆய்வாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.5) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 43.05 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.65 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.42 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.51அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 482 கனஅடி, பெருஞ்சாணிக்கு 187 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை வாரம் 4 நாட்கள் மட்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இரவு 9 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஆனால் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில் ரெயில் பணிகள் சிலர் ரயில்வே மேலாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 120 கி.மீ தூரத்திற்கு NH 32 அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை தற்போது உள்ள சாலையில் இருந்து தனியாக அமைக்கப்படுவதால், சுமார் 600 எக்டேர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக சாலை அமைய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.