India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ், வியாபாரி. கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி சென்றார். அங்கிருந்து இன்று காலை பேருந்தில் நாகர்கோவில் வந்தார். வடசேரி பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist, Health Visitor என 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 12 ஆம் வகுப்பு , any Degree, B.Pharm, D.Pharm, Diploma, DMLT தபடித்தவர்கள் ஏப்.5 வரை விண்ணப்பிக்காலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.13,000 முதல் ரூ.19,800 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்புவர்கள் இங்கே <
1.குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 2. காலை 10 மணிக்கு பழங்குடியின மக்களின் நான்காவது மாநில மாநாடு பேச்சிப்பாறையில் நடைபெறுகிறது. 3. மாலை 4 மணிக்கு மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட்டை கண்டித்து கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு சிபிஐ எம் எல் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது.
சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்கம் ஆகிய குளங்கள் பறவைகள் பாதுகாப்பு குளங்களாக உள்ளன. இக்குளங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இந்த குளங்களில் அளவுக்கு அதிகமாக தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாமரைகளை பறவைகளுக்கு இடையூறாக பறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறும்பனையைச் சேர்ந்தவர் ஜான் சுஜின் பிரதீப் (33). இவர் இருசக்கர வாகனத்தில் கருங்கல் – தேங்காய்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது கீழ்குளம் பகுதியில் இவரது டூவிலர் மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்களான சுசீந்திரம் ஷோபனா ராஜ், களியக்காவிளை கதிரசன், மார்த்தாண்டம் மாகின் மற்றும் சார்லஸ், கட்டுப்பாட்டு அறை சங்கர குமார், கடையால மூடு தாஸ், தக்கலை முருகன், தபால் பிரிவு கண்காணிப்பாளர் உதயகுமாரி ஆகியோர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சால்வை போர்த்தி கௌரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 22, 208 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 22,001 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை இத்திட்டத்தில் 13,000 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என கூறியுள்ளார். *நல்ல வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க* ஷேர்
வளரும் வேளாண்மை – கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் ஆண்டு மலர் வெளியீடு நிகழ்ச்சி ஏப்ரல் 1ஆம் தேதி நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் சங்கத்தில் நடைபெறுகிறது. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜ்குமார் தலைமை வகிக்கிறார். நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி தங்கம், கவுன்சில் உறுப்பினர் அனிதா நடராஜன், ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர் நிஜமுதீன் கண்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன் ராதாகிருஷ்ணன் ‘X’ கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இன்று(மார்ச் 28) அவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.