India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் அணையிலிருந்து கிராம புற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் புத்தேரி ஆகிய கிராமங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று இரவு முதல் முக்கடல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலையோரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கட்டில் 42 அடி நீரையும், பெருஞ்சாணி அணையில் 70 அடி நீரையும் தேக்கி வைக்க பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை பெரும்பாலும் அணையின் மறுகால் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் கவுன்சிலர்களை மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களுக்கு கொலை மிரட்டல் விட்ட ரவுடி பிபின் பிரியன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பஞ்சாயத்து துணை தலைவர், கவுன்சிலர்கள் இன்று புகார் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்க தவறினால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

ஆவேசம் மலையாள படத்தில் ரங்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது கன்னியாகுமரி காவல்துறை ஆவேசம் பட பகத்பாசில் படத்துடன் பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் மாட்டிக் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த மீம்ஸ் இணைய தளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள புது குடியிருப்பு சுப்பையார்குளத்தில் கேரள மாநிலம் பாறசாலை சேர்ந்த நபர் நேற்று இரவு தன்னுடைய உடமைகளை படித்துறையில் வைத்து விட்டு குளிப்பதற்காக குளத்தில் இறங்கியவர் நீரில் மூழ்கி பலியானர். இதனையடுத்து தீயணைப்புதுறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லை, வள்ளியூரில் கன மழையின் போது ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய குமரி மாவட்டம் ராணி தோட்டம் பணிமனை அரசு பேருந்து. இந்த சம்பவம் குறித்து அரசுப்பேருந்து ஒட்டுனர் சசிகுமார் என்பரை ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி தற்காலிக பணி நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 9.94, 10.04 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44. 91 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 47 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.5 அடி நீரும் இருப்பு உள்ளது.

கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குளு, குளு சீசன் நிலவுகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குமரி மாவட்டத்தில் 15.05.2024 முதல் 17.05.2024 ஆகிய நாட்களுக்கு மிதமான மழையும்.18.05.2024 மற்றும் 19.05.2024 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை இருக்கும் அதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகள், ஆற்று ஓரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.