India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரியில் உள்ள வட்டக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டக் கோட்டையாகும். இது திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கட்டப்பட்டது. 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட, இக்கோட்டையினுள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று லேசான மழை பெய்தது. மேலும், கடலோரப் பகுதியில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரியில் நேற்று (மே.27) பெய்த மழைப்பொழிவு விவரம்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், சுருளக்கோடு, திற்பரப்பு, பாலமோர், புத்தன் அணை, முள்ளங்கினவிளை, காளியல் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், சித்தாறு-I, குழித்துறை, துக்களாய், கோழிப்போர்விலை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சிவலோகம், நாகர்கோயில் AWS, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 15.15, 15. 25,அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.2 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.8 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 13 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16. 2அடி நீரும் இருப்பு உள்ளது.

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் அங்குள்ள விவேகானந்தர் பாறையில் ஜூன் 1ஆம் தேதி வரை 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் மற்றும் தக்கலை ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் துறை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் 28ம்தேதி (இன்று) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையத்தில் நடக்கிறது.
இம்முகாமில் இரு தய மருத்துவ சிகிச்சை, பல் சிகிச்சை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் உட்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்குகின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு அதிகாலை 4.10 மணிக்கு செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 2,9,16,23,30 தேதி இந்த ரயில் இயங்கும். இதே போல மறு மார்க்கத்தில் 3, 10, 17, 24, ஜூலை 1 ஆகிய தேதியில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் தற்போது ஒரு சில பழைமையான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக மரநாய்கள் தொல்லை கொடுத்து வந்தன. இதனால் ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி வேளிமலை வனபாதுகாப்பு அதிகாரிகள் மரநாய்களை பிடிக்க நீதிமன்றவளாகத்தில் கூண்டு வைத்தனர். நேற்று சிக்கிய மரநாயை வனத்துறையினர் மீட்டு சென்றனர்.

புத்தேரி – பார்வதிபுரம் பகுதியில் 4 வழி சாலை பணி நடந்து வருகிறது. வேலையாட்கள் அருகில் கூடாரத்தில் தங்கி இருந்தனர். நேற்று மாலை கூடாரத்தில் தென்காசி ராஜசேகர் (34) இருந்த போது நாகர்கோவில் டேவிட் ராஜ் (28) உட்பட 6 பேர் வந்து அவரிடம் தீப்பெட்டி கேட்டனர். இதில் தகராறு முற்றி ராஜசேகரை அவர்கள் கத்தியால் குத்தினர். தடுக்க வந்த 3 பேரையும் குத்தினர். வடசேரி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் 2024-25ம் கல்வியாண்டு முனைவர் பட்டம் (Ph.D) /முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை (National Overseas Scholarship Scheme NOS)) வெளிநாடுகளில் தொடர கல்வி உதவித்தொகை பழங்குடியின நல அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இதற்கு <
Sorry, no posts matched your criteria.