India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட திமுக – காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 376967 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 241464 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சுற்று-11 முடிவுகள்
காங்கிரஸ் வேட்பாளர். தாரகை கத்பட்-
மொத்தம்=51,728
பாஜக வேட்பாளர். நந்தினி.
மொத்தம்=25,959
அதிமுக வேட்பாளர் ராணி.
மொத்தம்=2,824
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.ஜெமினி-மொத்தம்=3,990
இதில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 25,769 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 3வது சுற்று ஓட்டு எண்ணிக்கை விவரம் வருமாறு, விஜய் வசந்த் (காங்கிரஸ்) 29,248, பொன். ராதா கிருஷ்ணன் பா.ஜ.க(14,196), அதிமுக (ராணி) 1944, நாம் தமிழர் (மரிய ஜெனிபர்) 2393 இதில் 15,052 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார்.

குமரி மக்களவைத் தொகுதியில் வாக்கும் எண்ணும் பணி இன்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி வைத்து என்னப்பட்டு வருகின்றது. முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 2665 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) ஆள்சேர்ப்பு முகாம் பெங்களூருவில் ஜூலை 3 முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இசைத்துறையில் அனுபவம் உள்ளவர், https://agnipathvayu.cdac.in வெப்சைட்டில் பதிவு செய்யலாம் . கடைசி நாள் ஜூன் 5. 17 முதல் 21 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்டத்தில் பைக்கில் ஹெல்மெட் இல்லாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிக ஒலி எழுப்பியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என கடந்த 5 நாட்களில் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக 306 பேர் மீது வழக்கு பதிவானது . சில வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. – என போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி சங்கமங்களின் பூமி.நம்
நாட்டின் புனிதநதிகள்
வெவ்வேறு கடல்களில்
பாய்கின்றன.இங்கே அந்த கடல்கள் சங்கமிக்கின்றன.பாரதத்தின் கருத்தியல் சங்கமமாக கன்னியாகுமரி விளங்குகிறது.இங்கே விவேகானந்
தர் நினைவகம், வள்ளுவரின் சிலை,காந்திமண்டபம்,காமராஜர் மணி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.இந்த சிந்தனை ஓட்டங்கள் தேசிய சிந்தனையின்
சங்கமமாக இங்கு ஒன்றுபடுகின்றன.

நாகர்கோவில் கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள்- அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. படிவம் 18 கொண்டுவரவில்லை எனக்கூறி முகவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி படிவம் இல்லை என்றாலும் உள்ளே அனுமதிக்க அனுமதித்தனர். பின், பல்வேறு சோதனைகளுக்கு பின் வாக்கு மையத்திற்குள் முகவர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.