Kanyakumari

News April 11, 2024

கன்னியாகுமரி அருகே கணவர் எடுத்த சோக முடிவு

image

குலசேகரம் அருகே மணலோடை புறாவிளையை சார்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி ஜெனிஷா கடந்த 26ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் மனமுடைந்த ஜெனிஸ் கடந்த 7ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 8ஆம் தேதி இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 11, 2024

திருவட்டார் கோவில் நாளை பங்குனி திருவிழா ஆரம்பம் 

image

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (12.04.2024) தொடங்குகிறது. இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு, ஆற்றூர் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலகமாக எடுத்து வரப்படுகிறது. இத்திருவிழா நாளை காலை 9 மணிக்கு கொடியேற்று நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 10-ம் நாளான ஏப்ரல் 21-ந் தேதி சாமிக்கு ஆராட்டு நடக்கிறது.

News April 11, 2024

தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

image

கன்னியாகுமரி மக்களவைத் பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல்-19ஆம் தேதி அன்று நடைபெறுவதையொட்டி அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி சட்டமன்றத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

News April 10, 2024

நாகர்கோவில்: தந்தம் கடத்திய இருவர் கைது

image

நாகர்கோவிலில் தமிழ்நாடு வன உயிரின குற்றப்பிரிவு தனிப்படையினர் செட்டிகுளம் பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு ஜோடி யானை தந்தம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. யானை தந்தத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், காரில் இருந்த இருவரிடம் விசாரணை செய்ததில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த புதியவன் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் என்பது தெரிய வந்தது.

News April 10, 2024

குமரி: பெண் ஒருவர் திடீர் தர்ணா போராட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று திடீரென பெண் ஒருவர் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு எனக்கு நீதி வேண்டும் என கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பெண்ணிடம் கேட்டதற்கு கலெக்டர் நேரில் என்னிடம் வந்து கேட்டால் தான் கூறுவேன் என அடம்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 10, 2024

குமரி: நில புரோக்கர் வீட்டில் 3 லட்சம் கொள்ளை

image

குளச்சல் அருகே உள்ள சாஸ்தான் கரை பகுதியை சேர்ந்தவர் கார்லுஸ். நில புரோக்கரான இவர் நில விற்பனையில் கிடைத்த 3 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படைக்கு பயந்து வங்கிக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். அவர் கொடுத்த புகாரின்பேரில், சிசிடிவியில் பதிவான 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு குளச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 10, 2024

குமரி மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

image

குமரி கிழக்கு மாவட்ட திமுக நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி வெற்றிக்காக தீவிரமாக உழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில மீனவர் அணி செயலாளர் ஸ்டாலின், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

குமரி மாவட்டத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை

image

முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம் ஏப்ரல்-11 என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பிறை காணும் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இந்த நாள் மாறுவது வழக்கம். இந்த வகையில் கேரள மாநிலம் பொன்னானியில் ஷவ்வால் பிறை இன்று வானில் தென்பட்டது. இதை முன்னிட்டு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல்-10) கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

தோவாளை: ரங்கோலியிட்டு தேர்தல் விழிப்புணர்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தோவாளை ஊராட்சி அலுவலகம் அருகே மலர்களால் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

கன்னியாகுமரி அருகே அரிவாள் வெட்டு

image

குமரி: காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இனிய சுதன் என்பவர் வேலைக்கு செல்லும் வழியில் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். பைக் பாதி தூரம் சென்றவுடன் அந்த நபர் இனிய சுதனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சீயோன் புரத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் கைது செய்தனர். 

error: Content is protected !!