India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் தற்போது பெருமூச்சு விட்டுள்ளனர்.

தமிழக கேரள எல்லைப் பகுதியான குமரி வெள்ளறடை பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் இன்று (ஜூன் 22) ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. வலது கை ஜன்னல் கம்பியில் கட்டப்பட்ட நிலையில், துப்பட்டாவில் ஜன்னலில் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து வெள்ளறடை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 16.1, 16. 2 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44. 38அடி நீரும், 77 அடி அணையில் 70.17 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 18.7 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.8 அடி நீரும் இருப்பு உள்ளது.

குமரி மாவட்டத்திற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.9,32,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து செடிகளான வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்றவை அடங்கிய தொகுப்பு ரூ.15/ விலையில் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக விண்ணப்பித்து செடிகளை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்திற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.9,32,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து செடிகளான வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்றவை அடங்கிய தொகுப்பு ரூ.15/ விலையில் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக விண்ணப்பித்து செடிகளை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் கள்ள சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஜூன் 21) கலந்தாய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 1 முதனிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாநில அளவில் இலவச மாதிரி தேர்வானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக ஜூன் 24, 27, மற்றும் ஜூலை 2,5 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டமானது ஜூன் 27ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பிப்ரவரி 2024 அன்று பெறப்பட்ட விவசாயம் தொடர்பான அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு இன்று (ஜூன் 21) கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களிலும் 10 முதல் 15 அடி உயரத்தில் ராட்சத அலை சீற்றத்துடன் வீசியது.
அதேவேளையில், வங்கக்கடல் நீர்மட்டம் மட்டும் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

குலசேகரம் ராமகிருஷ்ணா அறிவியல் மருத்துவ கல்லூரியில் ஜூன் 23ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ,நர்சிங், பொறியியல் படித்த, இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
Sorry, no posts matched your criteria.