Kanyakumari

News August 2, 2024

சென்னை TO நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

image

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று(ஆக.,2) இரவு சிறப்பு ரயில்(06005) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச லம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திரு நெல்வேலி, வள்ளியூர், வழியாக நாகர்கோவி லுக்கு நாளை (ஆக.3) காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

News August 2, 2024

ஆசிட் வீச்சு வழக்கில் அக்கா – தம்பிக்கு 7 ஆண்டு சிறை

image

குமரியை சேர்ந்த அக்காள் – தம்பிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஞ்சுகண்டறையை சேர்ந்தவர் கிரிஜாகுமார். கடந்த 2009ல் இவரது வீட்டை செல்லம்மாள் என்பவர் விலைக்கு கேட்டுள்ளார். கிரிஜாகுமார் மறுக்கவே, செல்லம்மாள், அவரது தம்பி நடராஜன் ஆசிட் வீசியதில் கிரிஜாகுமாரின் பார்வை பறிபோனது. இவ்வழக்கில் அக்காள்-தம்பி இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி மாரியப்பன் தீர்ப்பளித்தார்.

News August 2, 2024

குமரி அருகே கோயிலில் திடீரென தோன்றிய பாம்பு

image

கன்னியாகுமரி தாழக்குடி ஜெயந்தீஷ்வரர் கோயில் கருவறையில், பிரதோஷ நாளான நேற்று(ஆக.,1) நல்ல பாம்பு ஒன்று 30 நிமிடம் படம் எடுத்து நின்றது. மேலும் எந்தவித இடையூறும் செய்யாமல் நின்றதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, பக்தியுடன் நாகப் பாம்பை வழிபட்டுச் சென்றனர். பின்னர் கோயில் வளாகத்திற்குள் சென்று அந்தபாம்பு மறைந்தது. பிரதோஷ தினத்தில் கோயிலில் நாகம் தோன்றியது பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.

News August 2, 2024

பைக் ஓட்டியதாக 44 பேர் மீது வழக்கு

image

தக்கலை போலீசார் நேற்று(ஆக. 1) மேட்டுக்கடை, பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மது போதையில் பைக் ஓட்டி வந்த அருள்ராஜன்(38), ரோஜன்(54), முருகன்(55), அசீஸ்(35), ஹரிகிருஷ்ணன்(34), மோகன்(49), கண்ணன்(34), வினோ(40) ஆகியோரின் பைக்குகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். போதையில் பைக் ஓட்டியதாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 44 வழக்குகள் பதிவானது.

News August 1, 2024

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர அழைப்பு

image

மேல்புறம் வட்டாரத்தில் புயல், வெள்ளம், வறட்சியால் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைகின்றன. இதனை விவசாயிகள் எதிர்கொள்ள பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளது. வாழை, மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய கடைசிநாள் செப்டம்பர் 16-ந்தேதி ஆகும். ஏக்கர் வாழைக்கு ரூ.4,203, மரவள்ளிக்கு ரூ.1,463 பிரீமியம் தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என மேல்புறம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷாஜி கூறினார்.

News August 1, 2024

குமரி விவசாயிகளை கவர்ந்த உழவன் செயலி

image

விவசாயிகளுக்காக தமிழக அரசு துவங்கிய “உழவன் செயலி”யில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 27,478 பேர் இணைந்துள்ளனர். இதன் மூலமாக விவசாயிகள் மண் வளம், மானிய திட்டங்கள், உழவர் தயாரிப்புகள், விவசாய இடுபொருட்கள் பதிவு செய்தல், நீர்மட்டம் உட்பட 24 வகையான சேவைகளை பெற முடியும். மேலும், கூடுதல் விவரங்களை <>https://www.tnagrisnet.tn.gov.in/<<>> என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

News August 1, 2024

ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு புதிய டீன்

image

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றிய பிரின்ஸ் பயஸ் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை முதல்வராக இருந்த லியோ டேவிட் புதிய டீன் ஆக நியமிக்கப்பட்டார். அவரிடம் முன்னாள் டீன் இன்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.

News August 1, 2024

ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு புதிய டீன்

image

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றிய பிரின்ஸ் பயஸ் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை முதல்வராக இருந்த லியோ டேவிட் புதிய டீன் ஆக நியமிக்கப்பட்டார். அவரிடம் முன்னாள் டீன் இன்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.

News August 1, 2024

குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

image

குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறித்துள்ளது தமிழ்நாடு அரசு. இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாவும் விளங்கும் குமரி அனந்தனுக்கு விருது என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். காங்., மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான குமரி அனந்தனுக்கு, சுதந்திர தினத்தன்று தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

News August 1, 2024

வேளாண் தொழில் தொடங்க ரூ 1.லட்சம் மானியம்

image

பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில் குமரி மாவட்டத்தில் 2 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சமாக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!