India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்.19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோட்டில் காங். எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் அந்த தொகுதி காலியானது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்.19 தேதியே விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்லை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் மற்றும் தொல்லவிளை பாரதியார் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.