India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமைச்சர் மனோதங்கராஜ் முகநூலில் குறிப்பிட்டிருப்பதாவது, ஆதிக்கம் நிறைந்த இவ்வுலகில் பாலின ஒடுக்குமுறையை தைரியத்துடன் எதிர்கொண்டு அதே துறையில் தனது ஒடுக்குமுறை விலங்கை உடைத்து கழுத்தில் மகுடமாய் சூட காத்திருக்கும் வீரமங்கை வினேஷ் போகத்! அன்று உன் போராட்டத்திற்காக உனது கையை கட்டியவர்கள் இன்று கைதட்டுகிறார்கள்! பெண் சமுதாயத்திற்கு ஓர் உதாரணமாக திகழ்கிறாய். வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

2023ல் தோவாளை சார்பதிவாளராக இருந்த மேகலிங்கம் விடுப்பில் சென்றிருந்த வேளையில் அப்பொறுப்பில் சுப்புலெட்சுமி(33) பணியாற்றினார். அப்போது, முறைகேடாக 20 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று குமரி க்ரைம் போலீசார் சுப்புலெட்சுமி, தனராஜா, நம்பிராஜன், ஜெயின் சைலா, டெல்பின் ஆகியோரை சிறையில் அடைத்தனர். சுப்புலெட்சுமி 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி காவல்துறை சார்பில் ‘ராயன்’ பட பாடலை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள குமரி காவல்துறை, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தும் வகையில் தனுஷ் நடித்த ‘ராயன்’ படத்தின் “உசுரே நீதானே நீ தானே..நிழலா உன் கூட நானே” என்ற பாடல் வரிகளுடன் மீம்ஸ் வெளியிட்டுள்ளது. இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குமரி மாவட்டத்தில் 79 இடங்களில் வயது முதிர்ந்தோர் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஆய்வு தமிழக அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தேர்வு செய்யப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களில், குமரி மாவட்ட பொருள் இயல், புள்ளி இயல் துறை பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். சரியான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியர் அழகு மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெகநாதன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள், சென்னையில் இன்று (ஆக 7) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, இளைஞர் அணி சார்பில் குமரி மேற்கில் நடைபெற்ற பல்வேறு பணிகளை அவருடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, “நலத்திட்ட பணிகளை மக்களிடம் சேர்க்க இளைஞரணியினர் உழைக்க வேண்டும் என” உதயநிதி தெரிவித்தார்.

குழித்துறையில் நடக்கும் வாவுபலி பொருட்காட்சி திடலில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்ல வேண்டும். இதில் விஐபி-கள், அரசு அதிகாரிகளுக்கு இலவச பாஸ் ஒப்பந்ததாரர் மூலம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு கும்பல் விஐபி பாஸ் போன்று போலி அட்டை தயாரித்து ரூ.200-க்கு மக்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே முறைகேடாக பத்திரப்பதிவு செய்யததாக சார் பதிவாளர் உட்பட பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோவாளை சார் பதிவாளரின் பெயரில் உள்ள லாக் இன் ஐடி மூலம் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, சார்பதிவாளர் சுப்புலட்சுமி, அலுவலக உதவியாளர்கள் தனராஜ், நம்பிராஜ், ஒப்பந்த பணியாளர்கள் டெப்லின், ஜெயின் ஷைலா ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள அம்மன் கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அம்மனின் 2 கிராம் தங்கப் பொட்டு திருட்டுபோனது. இந்த நிலையில் நேற்று(ஆக.,5) காலையில் கோயிலின் கருவறை முன்பு தாமரை பூவுடன் அம்மனின் நகை(தங்க பொட்டு) இருந்தது. இதையடுத்து அம்மனின் நகையை திருடி தூக்கமின்றி இருந்து, தவறை உணர்ந்து மீண்டும் கோயிலிலேயே நகையை வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். SHARE IT.

கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆனந்தின் மகன் விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மருத்துவமனை சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.