India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சுதந்திரத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 14/08/2024 அன்று கிளாம்பாக்கத்திலிருந்து குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு 470 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆக.,16, 17 தேதிகளில் 365 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. * சென்னையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்*.

முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக ரூ.296.08 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். இதையொட்டி சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்டுள்ளது. மின்னொளியில் ஜொலிக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை காணலாம்.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமை தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4 லட்சம் 3 கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள பசுமை தொழில் நிறுவனங்கள் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், மேலாண்மை அலகு, இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 20.ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

குமரி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சின்னத்துறையை சேர்ந்த கார்லோசுக்கு சொந்தமான படகு திருட்டுப் போனது. இது தொடர்பான விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கேரளா திருச்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தப்பிய இலங்கையை சேர்ந்த அஜய் கிருஷ்ணா படகை திருடியது தெரியவந்தது. இந்நிலையில் அவர் இலங்கையில் கைது செய்யப்பட்டு படகு மீட்கப்பட்டதாக குமரி போலீசாருக்கு நேற்று(ஆக.,11) தகவல் வந்தது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வெள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில் ஆகிய 6 பிரசித்தி பெற்ற கோவில்களில் நாளை நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது.

தமிழக்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி மழை நிலவரங்களை கமெண்டில் சொல்லவும்*

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதாகுமாரி குழுவினர் இரவிபுதூர்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நிறுத்தாமல் சென்ற டெம்போவை துரத்தி சாமியார்மடம் அருகே மடக்கி பிடித்தனர். டிரைவர் டெம்போவை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, நடத்திய சோதனையில் டெம்போவில் 3000 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அரிசு மற்றம் டெம்போவை பறிமுதல் செய்தனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 18 & 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஆக.,19 & 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் நேற்று(ஆக.,10) இரவு தெரிவித்தனர். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

நாகர்கோவில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தினசரி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(ஆக.,12) சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். நாகர்கோவில் நடைபெறும் விழாவில் ஆட்சியர், மேயர் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

குமரி பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் 11 ஆம் வகுப்பு மாணவி. இவர் நன்றாக படித்தும் தேர்வின்போது பாடங்கள் மறந்து சரியாக தேர்வு எழுத முடியவில்லை என வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்(ஆக.,9) உடல்நிலை சரியில்லை என்று கூறி பள்ளிக்கு செல்லாத இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.