India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி: முட்டம் கடற்கரையில் இன்று அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, , முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை குமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ‘செல்பி’ பாயிண்ட் நேற்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்று பொதுமக்கள் மற்றும்
சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து செல்கிறார்கள்.
பேச்சிப்பாறை அருகே வலிய-ஏலா பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற இளைஞர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிணந்தோடு பகுதியில் வைத்து இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 19ம் தேதி அன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, விளவங்கோடு பாஜக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வி.எஸ்.நந்தினி இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு காங். எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில், அந்த தொகுதி காலியானது. தொடர்ந்து, மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி அன்றே விளவங்கோடுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
குமரி, வடசேரியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் ஒழுகினசேரியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு பெரியவிளையை சேர்ந்த சுகுமாரன்(29) என்பவர் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்தார். அப்போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுகுமாரன் கத்தியை எடுத்து கார்த்திக்கை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சூரிய ரேஸ்மி. இவர், நேற்று பணியில் இருந்தபோது அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த வியாபாரி அருள்ராஜன்(45) என்பவர் மதுபோதையில் வந்து, சூரிய ரேஸ்மியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்ராஜனை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, குமரி, தூத்துக்குட்டி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாங்குநேரியில் மார்ச்-25-ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வது குறித்து இன்று மாலை நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019 வரை 9 முறை குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர் பொன் ராதாகிருஷ்ணன். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் 10-ம் முறையாக குமரியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.