India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசின் காலை உணவுத் திட்டத்தால் தமிழ்நாட்டில் நகர்புற, ஊரகப் பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 18.5 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் பிற மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடு கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் வாயிலாக 15,962 மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு பிரிவினருக்கான மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் (Sports), முன்னாள் ராணுவத்தினர் (Ex-Service man), தேசிய மாணவர் படை (NCC), பாதுகாப்பு படை வீரி(Origin of Anthamaan Nicobar) மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே 28,29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 10 – 15 வரை நடக்கும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்துக்கல்லூரி அருகில் நாஞ்சில் காண்காட்சி மற்றும் பொருட்காட்சி தினமும் மாலை முதல் இரவு வரை நடைப்பெற்று வருகிறது. இங்கு ஈபிள் கோபுரமும், புர்ஜ் கலிஃபா கோபுரமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளது. பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.
குமரி மாவட்டத்தில் குரூப் – 4 தேர்வுகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று(மே 7) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குளச்சல் மின் விநியோகப் பிரிவிற்கு உட்பட்ட செம்பொன்விளை – குளச்சல் பீடரில் இன்று(மே 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாஸ்தான்கரை, அண்ணாசிலை, கள்ளியடைப்பு, சைமன்காலனி, கோடி முனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைக்காலத்தை ஒட்டி பொதுமக்களின் நலன் கருதி இன்றைய மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரியில், பள்ளிவிளை மத்திய குடோனில் இருந்து, மாநில அரசின் குடோனுக்கு அரிசி மூடைகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு மார்ச் மாதம் முதல் அரிசி மூட்டைகளை ஏற்றி செல்வதற்கான பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று(மே 8) மூடைகளை லாரிகளில் ஏற்ற மறுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைகு பின் அரிசி மூட்டைகளை ஏற்றினர்.
தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சிமையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து குமரியில் கடலில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. 4வது நாளாக தடை தொடரும் நிலையில், இன்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும். புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில் 2000 – 3000 ஆண்டுகள் பழைமையானது. கல் சுவரால் கட்டப்பட்ட இக்கோயிலில், சூரிய தேவன், விநாயகர், ஐயப்பன், பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. கடலோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கன்னியாகுமரியின் பழமையை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருக்கிறது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்(1996), தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவுமான வேலாயுதம்(73) இன்று(மே 7) காலை இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை(மே 9)காலை 10:30 மணிக்கு அவரின் சொந்த ஊரான வில்லுக்குறி, கருப்புக்கோட்டில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலாயுதம் மறைவுக்கு குமரி பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.