Kanyakumari

News April 1, 2024

குமாரியில் கடல் சீற்றம்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர்.

News April 1, 2024

குமரியில் ஆலோசனை கூட்டம்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல செயலாளர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீலிஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 1, 2024

பாஜக வேட்பாளர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

image

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று இரவு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 31, 2024

வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

image

நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (30) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரஞ்சித்திடம் ரூ.500-யை பறித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நேற்று நிஷாந்தை போலீசார் கைது செய்தனர்.

News March 31, 2024

கன்னியாகுமரி தொகுதி: 22 போ் போட்டி

image

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 22 போ் போட்டியிடுகின்றனா். இதில் பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜக), விஜய்வசந்த் (காங்கிரஸ்) , பசலியான் நசரேத் (அதிமுக) , மரியஜெனி பா்கிளாரா மைக்கேல்(நாம் தமிழா் கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 18 பேர் போட்டியிடுகின்றனா்.

News March 31, 2024

குமரி: பாஜக செயல்வீரர்கள் கூட்டம்

image

தேசிய ஜனநாயக கூட்டணி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டமானது மருங்கூர் V.S.N மஹாலில் நேற்று இரவு நடைப்பெற்றது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வானதி ஸ்ரீனிவாசன் எம் எல் ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 30, 2024

குமரி: அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த இயக்கம்

image

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் அவர்களை தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரதீஜீன் நேற்று சந்தித்து குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தார். மேலும் வேட்பாளர்கள் வெற்றி பெற முழுமூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் ராணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 29, 2024

கன்னியாகுமரி அருகே கோர விபத்து

image

குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் சந்திப்பில் இன்று கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகாமையில் இருந்த வீட்டின் மதில் சுவரை இடித்து நின்றது. இந்த விபத்தில் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதமடைந்தது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

News March 29, 2024

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

image

நாகர்கோவில் மேலராமன்புதூரை சோ்ந்த அசோக்(28), அயனிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அசோக்கிற்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதை மனைவி கண்டிக்கவே, நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கர்ப்பிண என பாராமல் அசோக் ராஜேஸ்வரிதை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அசோக்கை கைது செய்தனர்.

News March 28, 2024

கன்னியாகுமரி அருகே இளம்பெண் தற்கொலை

image

மார்த்தாண்டம் அடுத்த பழுக்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (40) எலக்ட்ரீசியன், இவரது மனைவி சித்ரா தேவி (36) வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!