Kanyakumari

News April 29, 2025

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தொடர்பு எண்கள்

image

காவல் துறை கண்காணிப்பாளர் -4652220047
காவல் துறை துணை கண்காணிப்பாளர்:
4651250741 -தக்கலை
4652220197 -நாகர்கோவில்
4652246947 -கன்னியாகுமரி
உதவி காவல் துறை கண்காணிப்பாளர் – 4651226227 – குளச்சல்
அனைத்து மகளிர் காவல் நிலையம்:
4652275949 -நாகர்கோயில்
4651271128 -குழித்துறை
4651228500- குளச்சல்
*ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

குமரி மாணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணி

image

(<<16242250>>முழு நிகழ்வு<<>>) மாணவன் விஷ்ணுபரத்தை கோயில் திருவிழாவுக்கு வரக்கூடாது என சந்துரு கூறியதை தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சந்துரு ஆட்டோ சாவியில் இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத் விலா & பின் பகுதியில் குத்தினார். பலத்த காயமடைந்த விஷ்ணுபரத்தை தன் ஆட்டோவிலேயே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 29, 2025

குமரி மாணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணி

image

(<<16242250>>முழு நிகழ்வு<<>>) மாணவன் விஷ்ணுபரத்தை கோயில் திருவிழாவுக்கு வரக்கூடாது என சந்துரு கூறியதை தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சந்துரு ஆட்டோ சாவியில் இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத் விலா & பின் பகுதியில் குத்தினார். பலத்த காயமடைந்த விஷ்ணுபரத்தை தன் ஆட்டோவிலேயே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 29, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 10 மணிக்கு நலவாரிய புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் உரிய காலத்தில் ஏற்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோணம் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு INTUCஉண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.மாலை 4.30 மணி – CPI(M) சார்பில் களியல் சந்திப்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

News April 29, 2025

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.65 கோடி மோசடி

image

வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் சாம்ராஜ். இவர் வடசேரி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் தீபக் பாலன் உட்பட மூன்று பேர் 1.65 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்*

News April 28, 2025

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ் 

image

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி பொறுப்பேற்கிறார்.

News April 28, 2025

இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ்

image

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று 27ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 28, 2025

மத்திய அரசுக்கு மனோ தங்கராஜ் கேள்வி

image

பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்கு குமரி மாவட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தாக்கியவன் கோழையா, வீரனா என்பது இந்தியாவின் கேள்வியல்ல? 26 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். என்ன செய்து கொண்டிருந்தது உளவுத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறதா மோடி அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 27, 2025

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

image

காட்டுவிளை பகுதியில் நேற்று மாலை அரசு பேருந்தை, வாலிபர் ஒருவர் வழிமறித்து, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்துள்ளார். இதுகுறித்து, பஸ் ஓட்டுநர் ராஜேஷ்குமார், கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜோயல் ராபர்ட் என்பவரை கைது செய்த போலீசார், அவர்மீது 4 பிரிவுகளில் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

News April 27, 2025

மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்

image

அஞ்சுகிராமத்தில் வடமாநில வாலிபர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். போலீசார் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!