India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆரல்வாய்மொழி சாலமன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஜன.8 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி செய்த போலீசாருக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் அடிப்படையில் ஆயுதப்படையில் வைத்து மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று (ஜன-9) நடைபெற்றது. இதில் 72 போலீசாருக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் பணியிடமாற்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் -ஆல் வழங்கப்பட்டது.

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

குமரியில் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த ’இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16-35 வயதுடையோர் பங்கேற்கலாம். தடகளம், கபாடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு ரூ.1,000 – ரூ.75,000 வரை பரிசு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.21க்குள் இங்கு <

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை மீண்டும் புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர். கோரிக்கையினை ஏற்று சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு 70% பணி நிறைவடைந்த பகுதிகளில் குளங்களை உடனடியாக செப்பனிட்டு மீள பயன்பட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று (ஜன.8) உத்தரவிட்டார்.

நாகர்கோவில் கலுங்கடியை சேர்ந்தவர் நிகாஷ் (15). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நித்திஷ் என்பவருக்கு புத்தகம் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதுகுறித்து நிகாஷ் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஜன.8) வழக்குப்பதிந்து ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <

புதுக்கடை அருகே முன்சிறை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் தனது மகனுடன் பைக்கில் உணவு வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் விமல்ராஜ் பைக் மீது மோதியது. இதில் விமல் ராஜ், விஷ்ணு உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ்(23). 5 ஆண்டுக்கு முன்பு +2 படித்தபோது விபத்தில் சிக்கிய ஜெனிஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவரால் சரிவர செயல்பட முடியாததால் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜன.7.ம் தேதி இரவு மாடி அறையில் இருந்த ஜெனிஷ்க்கு சாப்பாடு கொடுக்க தாயார் மரிய புஷ்பம் சென்றபோது தூக்கில் இறந்த நிலையில் ஜெனிஷ் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.