India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் கோட்டார் செட்டி தெரு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று (செப் 16) அதிகாலையில் முதியவர் ஒருவர் கடையில் உள்ள பொருட்களை திருடி சென்று விட்டு வெளியே வரும்போது மாரடைப்பில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <
குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக பணியாற்றிய வேல்முருகன் ரமணியை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்றுள்ளார். பின் வேல்முருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் இம்மாதம் 26ஆம் தேதி முதல்அடுத்த மாதம் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இதேபோல் தாம்பரத்தில் இருந்து 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்ககிழமையும் மாலை 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.
குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக வேலை பார்த்த வெள்ளிசந்தை வேல்முருகன் அவரை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்று விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திக்கணங்கோடு சந்திப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் 79 வழியோர கடலோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம்,முட்டம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11-ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா (38) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த ஆண்டு கிலோ 200 ரூபாய்க்கு மேல் ரப்பர் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ரப்பர் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிலோ 4 ரூபாய் வரை ரப்பர் விலை குறைந்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது
குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு இலியான் விளையை சேர்ந்த கஸ்தூரி ( வயது 50) என்பவரை அவரது கணவர் ஜஸ்டின் குமார் கழுத்தை அறுத்து நேற்று கொலை செய்தார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜஸ்டின் குமார் வேளாங்கண்ணி செல்வதற்காக நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நின்ற போது அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். சம்பவம்குறித்து போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.