Kanyakumari

News April 10, 2024

குமரி மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

image

குமரி கிழக்கு மாவட்ட திமுக நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி வெற்றிக்காக தீவிரமாக உழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில மீனவர் அணி செயலாளர் ஸ்டாலின், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

குமரி மாவட்டத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை

image

முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம் ஏப்ரல்-11 என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பிறை காணும் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இந்த நாள் மாறுவது வழக்கம். இந்த வகையில் கேரள மாநிலம் பொன்னானியில் ஷவ்வால் பிறை இன்று வானில் தென்பட்டது. இதை முன்னிட்டு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல்-10) கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

தோவாளை: ரங்கோலியிட்டு தேர்தல் விழிப்புணர்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தோவாளை ஊராட்சி அலுவலகம் அருகே மலர்களால் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

கன்னியாகுமரி அருகே அரிவாள் வெட்டு

image

குமரி: காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இனிய சுதன் என்பவர் வேலைக்கு செல்லும் வழியில் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். பைக் பாதி தூரம் சென்றவுடன் அந்த நபர் இனிய சுதனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சீயோன் புரத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் கைது செய்தனர். 

News April 9, 2024

குமரி: போதை கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி

image

குமரி, தக்கலை அருகே உள்ள வண்டாவிளையை சேர்ந்தவர் ஹரிதாஸ்(58), கொத்தனார். இவரது மனைவி லதா(48). ஹரிதாஸ் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும்(ஏப்.8) ஹரிதாஸ் பிரச்னை செய்யவே, ஆத்திரமடைந்த லதா வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த ஹரிதாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 9, 2024

குமரி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

image

கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று(ஏப்.8) பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பட்டுள்ளதால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றுநீருடன் கடல் நீர் கலந்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

கொலை முயற்சி வழக்கில் 7 பேருக்கு 10 ஆண்டு சிறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு காதலர்களை பிரிக்கும் நோக்கில், காதலனை, குமரி கடற்கரை பகுதிக்கு சமாதானம் பேச வரவழைத்த காதலி வீட்டை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் 2வது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ஹஷன் தீர்ப்பளித்துள்ளார்.

News April 9, 2024

குமரி: அதிமுக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு

image

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக பசலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவர் குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்த நிலையில் குமரி மாவட்ட புரட்சி பாரதம் கட்சி தங்கள் முழு ஆதரவை அதிமுக கூட்டணிக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து அதன் தலைவர் தங்கம் டேனியல் பசலியான் நசரேத் அவர்களை நேற்று(ஏப்.8) நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

News April 8, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

குமரி: வீடு வீடாக தபால் வாக்கு சேகரிக்கும் பணி

image

குமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டு கொடுத்து ஓட்டு பெற்று வருகின்றனர். அதன்படி, மாவடத்தில் 2,546 மாற்றுத்திறனாளிகளும், முதியோர் 3,982 பேரும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

error: Content is protected !!