India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அமிர்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரத்தில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் 2027 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்றும் கூறினார்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் எப். எம். ராஜரத்தினம் தலைமையில் நடைபெற இருப்பதாக மாவட்ட செயலாளர் மகேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக கூறி பலர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விதிகளை மீறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் குமரி மாவட்ட நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அப்போதைய குமரி ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கு சில இடங்கள் காலியாக உள்ளன.12ம் வகுப்பு சிறப்பு பொது துணைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இளநிலை பாடப்பிரிவில் ஆங்கிலம், வரலாறு, தமிழ் உட்பட 11 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் பிசி, எம்பிசி, எஸ்.சி., எஸ்.டி.பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் பிரகாசி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜ் கொலையைக் கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) நாளை (ஆக.23) நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எல். முருகன் நாளை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் அமிர்தா பல்கலைக்கழக வளாக திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி செல்லும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் கலைஞர் (46). செண்டை மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஊட்டுவாழ்மடம் பகுதியில் நடந்து சென்றபோது, வடிவீஸ்வரத்தை சேர்ந்த ரவுடி சபரீஸ் (29) கலைஞரை தடுத்து நிறுத்தி கன்னத்தில் அடித்து பாக்கெட்டில் இருந்த 220 ரூபாயை எடுத்ததுடன் அவரை அரிவாளால் வெட்டினாராம். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மேற்கண்ட இன மக்களை 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீனமுறை சலவையகங்கள் அமைக்க வழிவகை செய்யப்படுகிறது. அதனப்படி இக்குழுவிற்கு நவீனமுறை சலவையகங்கள் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 இலட்சம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (ஆக.21) திட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆட்சியர் ஆர். அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒரு சிறுமிக்கு அவர் காலை தாயன்புடன் காலை உணவை ஊட்டி விட்டார். குழந்தையும் மகிழ்ச்சியுடன் உணவை உண்டது.
நாகர்கோவில் புகைப்படக்காரர் ஜாக்சன் ஹெர்பி எடுத்த இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.