India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் I.N.D.I.A கட்சிகள் சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்.6) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகள் வழங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு அருகே இன்று மதியம் இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். இருசக்கர வாகனம் சேதமடைந்தது. தகவல் அறிந்த அங்கு வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவட்டார் அடுத்த மாத்தாரைச் சேர்ந்தவர் ஆபிரகாம்(50). இவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த மாதம் 31ம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டு மாத்தாரில் உள்ள உறவினரான சுரேஷ் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த நிலையில், ஏப்.4ம் தேதி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று(ஏப்.6) I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விஜய்வசந்த், “பார்ட் டைம் எம்பி என பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார்; ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்பியாக பணியாற்றினேன்; அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்தெடுங்கள் என்றார்.
பார்ட் டைம் எம்பி என்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார். ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்.பி.யாக பணியாற்றினேன் அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்து எடுங்கள் என நாகர்கோவில் நடந்த இந்திய கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேசினார்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சிற்றாறில் (கன்னியாகுமரி) – 4 செ.மீ., சிவலோகம், திற்பரப்பில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுருளக்கோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறில் தலா ஒரு செ.மீ. மழை பதிவானது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் இருந்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று(ஏப்.4) தோவாளை அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தோவாளையை சேர்ந்த அஜய்காந்த் என்பவரின் காரை சோதனை செய்ததில் ரூ.14 லட்சம் இருந்தது தெரிந்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.