India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று(ஏப்.8) பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பட்டுள்ளதால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றுநீருடன் கடல் நீர் கலந்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு காதலர்களை பிரிக்கும் நோக்கில், காதலனை, குமரி கடற்கரை பகுதிக்கு சமாதானம் பேச வரவழைத்த காதலி வீட்டை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் 2வது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ஹஷன் தீர்ப்பளித்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக பசலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவர் குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்த நிலையில் குமரி மாவட்ட புரட்சி பாரதம் கட்சி தங்கள் முழு ஆதரவை அதிமுக கூட்டணிக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து அதன் தலைவர் தங்கம் டேனியல் பசலியான் நசரேத் அவர்களை நேற்று(ஏப்.8) நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டு கொடுத்து ஓட்டு பெற்று வருகின்றனர். அதன்படி, மாவடத்தில் 2,546 மாற்றுத்திறனாளிகளும், முதியோர் 3,982 பேரும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
குமரி: பளுகல் சோதனை சாவடியில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு பெனடிக் ராஜ் நிலைதடுமாறி ஓடையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை
சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லங்கோடு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், நேற்று(ஏப்.7) போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, PWD ரோட்டில் வைத்து வேர் கிளம்பி ஊரை சேர்ந்த ரகு ராஜ் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 3-1/2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள <
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று(ஏப்.6) விளவங்கோடு, நாகர்கோவில் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக கூட்டணியில் உள்ள காங். சார்பில் குமரி தொகுதியில் விஜய் வசந்த் எம்பி மற்றும் விளங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் தாரகை கர்பர்ட் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இளங்குகின்றனர்.
Sorry, no posts matched your criteria.