Kanyakumari

News May 18, 2024

குமரி கலெக்டர் வேண்டுகோள்

image

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பொதுமக்கள் மழைக்காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து பருகவேண்டும். டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு டெங்கு காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால், அவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீர் தேக்க தொட்டியை 15 தினங்களுக்கு 1 முறை சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.

News May 18, 2024

குமரி இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் குமரியில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விபரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News May 18, 2024

கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

image

தென் இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக குமரி கடல் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் முக்கடல் சங்கமம் சங்கிலி துறையில் இறங்கி யாரும் கால் நனைக்க கூடாது என காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அங்கு 24 மணி நேரம் செயல்படும் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

News May 18, 2024

ரேஷன் பொருட்கள் போதிய இருப்பு வைக்க உத்தரவு

image

பருவமழைக் காலங்களில் நியாயவிலை கடைகளில் நுகர்பொருட்கள் (ரேஷன் பொருட்கள் ) போதுமான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்வதோடு, அவற்றினை பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும். மேலும் அதிகளவு நுகர்பொருட்கள் தேவைப்படுமனால் அவற்றினை இருப்பில் வைக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொது விநியோகத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தெரிவித்தார்.

News May 18, 2024

மீண்டும் போக்குவரத்து துவக்கம்

image

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டடு இருந்தது. இதனால் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் செல்லும் சலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பாலத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், இன்று முதல் மீண்டும் மேம்பாலம் வழியாக போக்குவரத்து துவங்கியுள்ளது.

News May 18, 2024

குமரி மழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்பு மேலாண்மை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

News May 18, 2024

காவல்துறைக்கு கலெக்டர் உத்தரவு

image

மழைக்காலத்தில் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள், விபத்துகள் ஏற்படும் போதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பேரிடர் மேலாண்மைப்பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் தொலைபேசி எண் 1750-க்கு தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என குமரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

News May 18, 2024

மின்சாரத் துறை தயார் நிலையில் இருக்க உத்தரவு

image

மின்சாரத்துறையினர் தயார் நிலையில் இருக்க குமரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளவாது, தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், குமரி மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்களை பார்வையிட்டு சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும். மின்கம்பி அறுந்து விழும் போது உடனடியாக சரிசெய்திடவும், மின்கம்பிகள் அறுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

News May 18, 2024

மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

image

குமரி மாவட்டத்தில் மே-19 வரை கனமழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஏற்று குளச்சல், கடியபட்டணம், முட்டம், தேங்காபட்டணம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் எவரும் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை.

News May 18, 2024

குமரி மாவட்டத்திற்கு மழை

image

குமரி மாவட்டத்தில் இன்று (மே.18) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் குமரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!