India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி 3வது வார்டு பகுதியில் உள்ள மாறாங்குளத்தை தூர்வார ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் மாறாங்குளத்தில் இருந்து அளவுக்கு அதிகமான மண்ணை அள்ளி சென்று விட்டார். இதை எதிர்த்து 5-வது வார்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி சசி என்பவர் மண் அள்ளி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (மே-20) தொடர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சிலவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,274 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 2 நாட்களில் 172 பேர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று குமரி மாவட்டம் வருகை தந்தார். வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சரை முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜன் அன்புடன் வரவேற்றார். நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் வரத்து அதிகமானது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமானது. இந்த வகையில் திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு (மே.20 – 24) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மேலும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தபடி இன்று காலை முதல் சூறை காற்றுடன் கனமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

திருத்துவபுரத்தில் உள்ள குழித்துறை மறைமாவட்ட பேராலய விழா கடந்த 17 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 5 ஆம் திருவிழா நாளான நாளை மாலை சமய நல்லிணக்க
பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் (ஜயாவழி சமயதலைவர் ), ஹெச். ஹாமிம் முஸ்தபா (கீற்று மாற்று ஊடகம், தக்கலை), லியோ பெலிக்ஸ், அருட்பணி ஏ. மரிய வின்சென்ட் (மணலிக்குழிவிளை பங்கு அருட்பணியாளர்) ஆகியோர் பேசுகின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த மழையினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
நெசவாளர் காலனி, நங்காண்டி , தெரிசனங்கோப்பு சந்திப்பு, கொக்கல்விளாகம் சானல் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழையின் போது பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் புகுந்தால் முகாம்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கனமழை காரணமாக நாகர்கோவில் அருகே உள்ள மாநகராட்சி பாறைக்கால்மடம் பகுதி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.