India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்திற்கு நாளை (மே.23) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, கன்னியாகுமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பதிவாகக் கூடும்.
கன்னியாகுமரியில் நேற்று (மே.21) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொட்டாரம் பகுதிகளில் 9 செ.மீ கொலச்சல், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் 7 செ.மீ குருத்தங்கோடு பகுதியில் 6 செ.மீ எரானியல், குழித்துறை, கோழிப்போர்விளை, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் துக்களாய், முள்ளங்கினாவிளை, களியல், அடையாமடை ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடைமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று (22.05.3024) மாலை 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர் மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரியும் நடைபெறவில்லை.
4வது நாளாக தடை நீடிப்பதால் திற்பரப்புக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்கவும் முடியாமல், படகு சவாரியும் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்புகின்றனர்.
குமரி மாவட்டம் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான தென் தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் அலை 0.3 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை உயரக்கூடும். மேலும் கடலில் நீரோட்டம் அதிவேகத்தோடு இருக்கக்கூடும். எனவே கடற்கரையோரம் பேரலைகள் ஏற்படக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்கும் படி குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 11.84, 11.94 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.1அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 50.05அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.4 அடி நீரும் இருப்பு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த புனித தலமான காளிகேசம் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி பூஜை வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை மிதமான இடி மின்னலுடன் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமரி: கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் பால் சுதாகர்(50). இவர் சொந்த வேலை காரணமாக நேற்று தடிக்காரன் கோணத்திற்கு தன்னுடைய சொகுசு காரில் சென்று கொண்டு இருந்தார். அவர் தெரிசனங் கோப்பு அருகே வரும் போது எதிரே முருகன் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் சேதமானது. காரில் இருந்த பால் சுதாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.