India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரியில் நேற்று (மே.23) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேச்சிப்பாறை பகுதியில் 8 செ.மீட்டரும், அடையமடையில் 6 செ.மீட்டரும் சித்தாறு-I, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, பாலமோர், மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் முள்ளங்கினாவிளை, திற்பரப்பு, மைலாடி, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி, தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செண்பகராமன் புதூர் ஊராட்சி கட்டளைகுளம் அருகே செயல்பட்டு வரும் பன்றிபண்ணைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொண்டு சென்ற மினி லாரி தோவாளை சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.24) மதியம் 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.42, 13.51 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.64 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 53.6அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 5.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.6 அடி நீரும் இருப்பு உள்ளது.
குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று (மே.24) தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. வைகாசி திருவிழாவையொட்டி இன்று காலை தலைமை பதியில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து அய்யா வைகுண்டர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.24) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில வனத்துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்துகிறது. குமரி மாவட்டத்தில் 18 பகுதிகளில் 4 வனச்சரகர்கள், மேற்பார்வையில் 49, ஊழியர்கள் 22 தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று துவங்கிய பணி நாளை முடிவடைகிறது. வனத்தில் யானை செல்லும் பாதை, யானை சாணம் ஆகியவற்றை வைத்து கணக்கிடும் பணி நடக்கிறது என மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தார்.
குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு புலிக் கூட்டுவிளையைச் சேர்ந்த மூதாட்டி எஸ்தர் (71). இவருடன் குஞ்ஞாலி என்ற மூதாட்டியும் வசித்து வந்தார். இன்று பெய்த கனமழையில் எஸ்தரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது அந்த இடத்தில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இடிந்த வீட்டை சரி செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ்தர் கோரிக்கை விடுத்தார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள சிறியகாட்டுவிளையை சேர்ந்தவர் சுனில்(39). மது குடிக்கும் பழக்கம் உடையவர். இந்நிலையில் நேற்று மதியம் மார்த்தாண்டத்தில் மதுபோதையில் மயங்கி கிடந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.