India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது லெமூர் பீச். இங்கு, நேற்று(மே 6) திருச்சியில் இருந்து சுற்றுலா வந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து இங்கு பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கடற்கரையை மூட உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இந்த கடற்கரை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டது.
குமரி மாவட்டம் முக்கடல் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் அனீஸ்(24), சுபின்(21). இவர்கள் நேற்று முன்தினம்(மே 5) பூதப்பாண்டி அருகே மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, சுற்றுலா வேன் ஒன்று இவர்களது பைக் மீது மோதியது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று(மே 6) உயிரிழந்தனர். பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் சுரேஷ் குமாரை கைது செய்தனர்.
குமரி, ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரையில், திருச்சியில் இருந்து சுற்றுலா வந்த தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய நிலையில், 2 மாணவிகள், 3 மாணவர்கள் உயிரிழந்தனர். தஞ்சையை சேர்ந்த சாருகவி(24), நெய்வேலியை சேர்ந்த காயத்ரி(25), ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ்(24), திண்டுக்கலை சேர்ந்த ப்ரவீன் (23), குமரியை சேர்ந்த சர்வதர்ஷித் (23) ஆகிய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மலக்கவுண்டன் பாளையம் மகாராஜா காலனியை சேர்ந்த ஷிபு வர்க்கீஸ் என்பவரின் மகன் சுபின் வர்க்கீஸ்(20). இவர் திருவட்டார் அருகே மாத்தாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தவர், இன்று மாலை 4 மணிக்கு பரளியார் பாயும் அருவிக்கரை தடுப்ணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவட்டாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கடல் அலையில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, குமரி கடற்கரை பகுதிகளில் மேலும் இயல்பை விட 1.5 மீ அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் தகவல் சேவைகளுக்கான தேசிய மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் கடற்கரையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கம்பிளார் பகுதியை சேர்ந்த தந்தையும், மகளும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். தந்தை மீட்கப்பட்ட நிலையில் மகள் ஆதிஷா(7) மாயமானார். அவரை தேடும் பணி இரவு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அந்த சிறுமியை சடலமாக மீட்டனர். இந்த சோக செய்தி கம்பிளார் பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 95.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.91% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 98.22% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்
குமரி மாவட்டத்தில் நேற்று(மே 5) ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தேங்காப்பட்டணம் கடலில் கம்பிளார் பகுதியை சேர்ந்த தந்தையும், குழந்தையும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். தந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. மீட்பு பணியை ராஜேஷ் குமார் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீட்பு பணியை தீவிரப்படுத்த கேட்டு கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.84% மாணவர்கள் நீட் தேர்வை எழுதி உள்ளனர்- 5196 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 4980 பேர் நீட் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று நீட் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 216 தேர்வு எழுதவில்லை. மேலும் நீட் தேர்வில் கேள்விகள் சுலபமாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் எடுப்போம் எனவும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.