India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்துக்கல்லூரி அருகில் நாஞ்சில் காண்காட்சி மற்றும் பொருட்காட்சி தினமும் மாலை முதல் இரவு வரை நடைப்பெற்று வருகிறது. இங்கு ஈபிள் கோபுரமும், புர்ஜ் கலிஃபா கோபுரமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளது. பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.
குமரி மாவட்டத்தில் குரூப் – 4 தேர்வுகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று(மே 7) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குளச்சல் மின் விநியோகப் பிரிவிற்கு உட்பட்ட செம்பொன்விளை – குளச்சல் பீடரில் இன்று(மே 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாஸ்தான்கரை, அண்ணாசிலை, கள்ளியடைப்பு, சைமன்காலனி, கோடி முனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைக்காலத்தை ஒட்டி பொதுமக்களின் நலன் கருதி இன்றைய மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரியில், பள்ளிவிளை மத்திய குடோனில் இருந்து, மாநில அரசின் குடோனுக்கு அரிசி மூடைகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு மார்ச் மாதம் முதல் அரிசி மூட்டைகளை ஏற்றி செல்வதற்கான பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று(மே 8) மூடைகளை லாரிகளில் ஏற்ற மறுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைகு பின் அரிசி மூட்டைகளை ஏற்றினர்.
தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சிமையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து குமரியில் கடலில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. 4வது நாளாக தடை தொடரும் நிலையில், இன்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும். புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில் 2000 – 3000 ஆண்டுகள் பழைமையானது. கல் சுவரால் கட்டப்பட்ட இக்கோயிலில், சூரிய தேவன், விநாயகர், ஐயப்பன், பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. கடலோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கன்னியாகுமரியின் பழமையை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருக்கிறது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்(1996), தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவுமான வேலாயுதம்(73) இன்று(மே 7) காலை இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை(மே 9)காலை 10:30 மணிக்கு அவரின் சொந்த ஊரான வில்லுக்குறி, கருப்புக்கோட்டில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலாயுதம் மறைவுக்கு குமரி பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவட்டார் மின் விநியோகத்துக்கு உட்பட சுருளகோடு பீடரில் நாளை(மே 9) மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வேர்க்கிளம்பி ஏ.பி.சுவிடச் முதல் மாறாங்கோணம் , கல்லங்குழி , வாழவிளை , புலவன் விளை, மார்த்தாண்டன் விளை, ஒட்டலி விளை மற்றும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அனேக இடங்களில் வரும் வியாழன் (மே-9) முதல் கோடை மழைக்காலம் துவங்க வாய்ப்பு உள்ளது. மேலும் தினசரி பிற்பகல் நேரத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.