Kanyakumari

News March 21, 2024

குமரி: யார் இந்த பொன்.ராதாகிருஷ்ணன்

image

1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019 வரை 9 முறை குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர் பொன் ராதாகிருஷ்ணன். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் 10-ம் முறையாக குமரியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

News March 21, 2024

குமரி: ரூ.10.20 லட்சம் பறிமுதல்

image

கன்னியாகுமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இன்று நாகர்கோவில் அடுத்த புத்தேரி பாலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1.55 லட்சம் ரூபாயை கணேஷ் என்பவரிடம் இருந்து பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது வரை நடத்திய பறக்கும் படை சோதனையில் ரூ.10.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

குமரி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. கன்னியாகுமரியில் முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.

News March 21, 2024

குமரி: பெண் மர்ம மரணம் – போலீஸ் விசாரணை

image

நித்திரவிளையை சேர்ந்தவர் சஜின்ளி . இவரது மனைவி ஷானிகா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. நேற்று இரவு வீட்டில் மயங்கி கிடந்த ஷானிகாவை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது‌. இது குறித்து ஷானிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2024

குமரி: கோவில் பூஜையில் கலந்து கொண்ட மேயர்

image

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 21, 2024

விளவங்கோடு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல். 19 அன்று நடைபெற உள்ளது. விளவங்கோடு சட்டமன்ற அதிமுக வேட்பாளராக மகளிரணி துணைச்செயலாளர் கன்னியாகுமரி சிறுபான்மை கிறிஸ்தவ மகளிர் முன்னேற்ற சங்க கெளரவ தலைவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பசிலியா நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

குமரி: முதியோர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

குமரி: மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

image

குமரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர வைப்பறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் பணி நேற்று(மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 20, 2024

குளச்சல் அருகே துடிதுடித்து பலி!

image

குளச்சலை சேர்ந்த சூசைராஜ் மகன் ஜோனி(32). மீன் வியாபாரியான இவர் நேற்று பைக்கில் வாணியக்குடியில் இருந்து முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எதிரே குளச்சல் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக ஜோனியின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜோனி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!