Kanyakumari

News May 10, 2024

கன்னியாகுமரி 3ஆவது இடம்!

image

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.17% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 92.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் 3ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: கன்னியாகுமரியில் 96.24% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 96.24% தேர்ச்சி விகிதம் பதிவாகி மாநில அளவில் 4வது இடம் பிடித்துள்ளது. இதில் மாணவர்கள் 94.28% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.14% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த கிள்ளியூர் MLA

image

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றில் கடல்நீர் உட்புகுந்து குடிநீர் உப்பு நீராக மாறி வருவதை தடுக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து 5 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மே 9) மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு மனு அளித்தார்.

News May 9, 2024

நாகர்கோவில் கல்லூரியில் கல்லூரி கனவு 2024

image

நாளை (10.05.2024) காலை 9:15 மணிக்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் “கல்லூரி கனவு 2024 ” என்ற பெயரில் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடக்கிறது. பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு +2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

News May 9, 2024

குமரி முன்னாள் எம்எல்ஏவுக்கு பிரதமர் புகழாரம்

image

தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவான குமரி மாவட்டம் பத்மநாபபுரம் முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இவரை போன்றவர்கள்தான் தமிழகத்தில் பாஜகவை கட்டி எழுப்பியவர்கள். ஏழைகளின் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்காக எப்பொழுதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

நாகர்கோவில் வல்லன்குமார விளையை சேர்ந்தவர் பாக்கிய லெட்சுமி(29), அரசு ஊழியர். இவர் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது கணவர் ராஜலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு திருமணமாகி 2 வருடம்தான் ஆவதால்  DO விசாரணை நடத்தி வருகிறார்.

News May 9, 2024

முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் தம்பதி!

image

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த மரத் தொழிலாளி கெளரி சங்கர். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயது ஆண்குழந்தை உள்ளது. பிறந்த 3 மாதத்தில் கண்ணில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லாததால் முதல்வர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 9, 2024

குமரி வரும் பாஜக மாநில தலைவர்

image

குமரி மாவட்டம் தென்னிந்தியாவின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேலாயுதம் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார்.

News May 9, 2024

காலை உணவுத் திட்டத்தால் 15,962 மாணவர்கள் பயன்

image

அரசின் காலை உணவுத் திட்டத்தால் தமிழ்நாட்டில் நகர்புற, ஊரகப் பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 18.5 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் பிற மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடு கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் வாயிலாக 15,962 மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

News May 9, 2024

நாகர்கோவில் அரசு கல்லூரியில் கலந்தாய்வு?

image

நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு பிரிவினருக்கான மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் (Sports), முன்னாள் ராணுவத்தினர் (Ex-Service man), தேசிய மாணவர் படை (NCC), பாதுகாப்பு படை வீரி(Origin of Anthamaan Nicobar) மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே 28,29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 10 – 15 வரை நடக்கும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!