Kanyakumari

News September 9, 2024

போக்குவரத்து விதிகளை மீறிய 2,128 பேர் மீது வழக்கு

image

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீசார் அபராதம் விதித்தனா். ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தில் செல்வது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது என குமரி மாவட்டம் முழுதும் ஒரு வாரத்தில் 2128 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்ததாக போக்குவரத்து போலீசார் நேற்று(செப்.8) தெரிவித்தனர்.

News September 9, 2024

குமரியில் இருந்து  தாமதமாக புறப்பட்ட ரயில்

image

குமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் ரயில்வே கேட்டில் நடக்கும் பால பணிகளால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் மூன்று ரயில்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
கன்னியாகுமரி – திப்ரூகர், கன்னயாகுமரி – சென்னை, நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் ஆகிய மூன்று ரயில்களும்  ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

News September 8, 2024

குமரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், குமரி உள்ளிட்ட 16 மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இதனால் வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

குமரி மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

image

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர் வரும் சாதாரண தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது மிகவும் அவசியமாகிறது. இதில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும் என குமரி ஆட்சியர் உட்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

News September 8, 2024

குமரி மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் ரோந்து

image

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடைபெற்றது.  இதனை ஒட்டி விநாயகர் சிலைகள் மாவட்டத்தில் 1500 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் ரோந்து பணியில் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதிலும் 32 போலீஸ் அதிகாரிகள் தலைமையில் இரவு விடிய விடிய ரோந்து பணி நடைபெற்றது.

News September 8, 2024

நாகர்கோவில் மாநகராட்சி கடைகள் ஏலம் – ஆணையர்

image

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், கழிவறைகள் உள்ளிட்ட ஆண்டு குத்தகை மற்றும் மாத உரிமத் தொகை மற்றும் ஆண்டு குத்தகை உரிமத்திற்கு ஆண்டு தொகை அடிப்படையில் மாநகராட்சியால் பொது மற்றும் சிறப்பு ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு மாநகராட்சி ஆணையர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் வரும் 18ஆம் தேதி அன்று ஏலம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

குமரி மாவட்டத்திற்கு புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

image

தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம்ட உதவி ஆட்சியராக வினய் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முன்பு கோட்டாச்சியர் தமிழரசி அவர்கள் இருந்தது குறிப்பிட தக்கது

News September 7, 2024

குமரியில்  படகு போக்குவரத்து  4 மணி நேரம் தாமதம்

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்கி வரும் நிலையில், கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று படகு போக்குவரத்தானது 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கடல் நீர்மட்டம் சீரானதை தொடர்ந்து படகு போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது.

News September 7, 2024

குமரியில் வாழை இலை கடும் உயர்வு

image

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி நாளையும் நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாக உள்ளது. இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்பா மார்க்கெட் ஆகியவற்றில் வாழை இலையின் விலை உயர்வு இரண்டு மடங்காக உள்ளது. கடந்த வாரம் 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு 600 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் இன்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

News September 7, 2024

டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது

image

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையை தொடர்ந்து பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!