Kanyakumari

News March 25, 2024

விளவங்கோடு தொகுதியில் இந்து மகா சபா வேட்பாளர்

image

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். எனவே விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஓம் பிரகாஷ் என்பவரை வேட்பாளராக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

News March 25, 2024

குமரி: பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று எம்.ஆர் காந்தி  மற்றும் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News March 25, 2024

தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் மீட்பு

image

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் மற்றும் அவர்களின் விசை படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று விஜய் வசந்த் எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீட்டு குமரிக்கு அழைத்து வந்தார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எம்பி நன்றி தெரிவித்தார்.

News March 24, 2024

கன்னியாகுமரி: செல்போன் பறித்த சிறுவர்கள் கைது

image

கன்னியாகுமரி அருகே உள்ள சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் சூசை (57), மீனவர்.
இவர் கன்னியாகுமரியில் சீரோ பாயிண்ட் பகுதியில் நேற்று செல்போன் பேசிய படி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். திடீரென சூசை கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.

News March 24, 2024

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி ஆண்டு விழா

image

கன்னியாகுமரி மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பீட்டர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். இயக்குனர் டேவிட் பிலிப் டேனியல் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜேக்கப் ஆர்.டேனியல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

News March 23, 2024

கன்னியாகுமரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில், பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

News March 23, 2024

கன்னியாகுமரி அருகே விபத்து

image

குமரி மாவட்டம் பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் நேற்று இரவு இளஞ்சிறை பகுதியில் பைக்கில் சென்ற போது எதிரே வந்த சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். வினோத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை பறிமுதல் செய்த பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 23, 2024

குமரி: மணற்சிற்பத்தை பார்வையிட்ட ஆட்சியர்

image

கன்னியாகுமரி: முட்டம் கடற்கரையில் இன்று அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, , முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

News March 23, 2024

குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை குமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

error: Content is protected !!