India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மக்களவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோட்டார், பறக்கை ஜங்ஷனில் தொடங்கி இளங்கடை, வெள்ளடிச்சி விளையில் பேரணி நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் விஜய் வசந்த் நாளை
(27.03.24) காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். இதில் காங்கிரஸ் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள புகழ்மிக்க அய்யாவழி இயக்கத்தின் தலைமைபதியான சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமிபதியில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் மற்றும் பாஜகவினர் வந்திருந்தனர்.
குமரி மக்களவை தொகுதியில் நேற்று(மார்ச் 25) வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் சொத்து விவரம். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.7.60 கோடி; அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.8.10 கோடி, மனைவி பெயரில்-ரூ.1.04 கோடி; நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரின் அசையும், அசையா சொத்துகள்- ரூ.4.50 கோடி, கணவர் பெயரில் – ரூ.1.14 கோடி.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக ராணி அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண் தங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மாநில அதிமுக மீனவரணி செயலாளர் பசலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம்,எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த பொட்டல் விலக்கு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (61) .இவர் நேற்று மாலை தனது பைக்கில் பொருட்கள் வாங்குவதற்காக அத்தி கடைக்கு சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்., சார்பில் தாரகை கத்பர்ட் போட்டியிடுவதாக சன்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் சேவகி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.