Kanyakumari

News September 12, 2024

குமரியில் ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு முகாம்

image

குமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. SHARE IT.

News September 12, 2024

குமரி மாவட்டத்தில் மழை – வானிலை தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (செப்.12) காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையினால் தண்ணீர் பல பகுதிகளில் தேங்க வாய்ப்புள்ளதாகவும், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News September 12, 2024

குமரியில் உணவு திருவிழா – ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 9 வட்டாரங்கள் மற்றும் 95 கிராம ஊராட்சிகளிலும் உணவுத் திருவிழா
ஊராட்சி அளவிலான போட்டிகள் 12, 13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும், வட்டார அளவிலான போட்டிகள் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அந்தந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (செப்.11) தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

மறியலில் ஈடுபட முயன்ற MLA தாரகையால் பரபரப்பு

image

குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதி சர்வோதய சங்கத்தில் இருந்த மகாத்மா காந்தி உருவ சிலையின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கபட்டது. இதை கண்டித்து நேற்று(செப்.,11) மாலை பொதுமக்கள் மற்றும் காங்., தொண்டர்களுடன் கழுவன்திட்டை சந்திப்பில் விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் மறியலில் ஈடுபட முற்பட்டார். அப்போது போலீசார், 2 தினங்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்து போராட்டத்தை தடுத்தனர்.

News September 12, 2024

குமரியில் 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

image

குமரி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மேற்பார்வையில் 18 வயதுக்கு குறைவான பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இருசக்கரவாகனங்களை ஓட்டி வந்ததால் 9 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.

News September 11, 2024

காதலியின் தம்பி தங்கைக்கு கத்திக் குத்து

image

குமரி மாவட்டம் குறும்பனையை சேர்ந்த வாலிபர் ஜினு என்பவர் அதே ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வரவே, காதலி வீட்டுக்கு சென்ற ஜினு காதலியின் தம்பி தங்கையை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. திருமணம் செய்ய சம்மத கடிதம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரையும் அவரது சகோதரரையும் குளச்சல் போலீசார் இன்று கைது செய்தனர்.

News September 11, 2024

குமரி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியில் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 11, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

image

தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 64 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. மாவட்ட அளவில் 52 வகையான போட்டிகள், மண்டல அளவில் 12 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்க 30000 பேர் இதுவரையிலும் பதிவு செய்துள்ளனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 பரிசு வழங்கப்படும்

News September 11, 2024

சிறு,குறு தொழில்களை பாதுகாக்க முன்னாள் எம்பி வலியுறுத்தல்

image

“நாட்டின் மொத்த உற்பத்தியில் சிறு குறு நடுத்தர தொழில்களும் அங்கம் வகித்து வருகின்றன; கார்ப்பரேட் தொழில்களுக்குரிய உதிரி பாகங்கள், துணைப் பொருட்களை சிறு குறு நடுத்தர தொழில்கள்தான் உற்பத்தி செய்கின்றன; நாட்டிற்கு நிதி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் சிறு குரு தொழில்களை பாதுகாக்க வேண்டும்” என முன்னாள் எம்பி பெல்லார்மின் வலியுறுத்தியுள்ளார்.

News September 11, 2024

குமரி மாவட்டத்தில் 45 பேர் குண்டர்சட்டத்தில் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரையிலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை நேற்று (செப் 10) தெரிவித்துள்ளது.

error: Content is protected !!