Kanyakumari

News April 24, 2024

குமரியில் தொடரும் கண்காணிப்பு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்(ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

கன்னியாகுமரி அருகே மோதல்

image

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (21-4-24) மினி பேருந்து ஒட்டுனர்களிடையே ஒருவருக்கொருவர் முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் மினி பேருந்து ஒட்டுனர் மணிகண்டன் என்பவரை மற்றொரு மினி பேருந்து ஒட்டுனர் வைகுண்டன் இரும்பு கம்பியால் தாக்கியதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 24, 2024

குமரி: மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்

image

குமரி மாவட்டம் மண்டைக்காடு முருகேசன் – மகேஸ்வரி தம்பதியின் மகள் ஹரிஷ்மா தேவிக்கும், அம்மாண்டிவிளை அருள்துரை – கங்காவதி தம்பதியரின் மகன் அருண் பிரகாசுக்கும் நேற்று(ஏப்.21) கருமண் கூடலில் திருமணம் நடந்தது. பின்னர் புது மணத்தம்பதிகள் காளை மாட்டு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினர். இதை பலரும் வரவேற்றனர்.

News April 22, 2024

குமரி: 3,000 அடி உயரத்தில் லட்சார்ச்சனை

image

குமரி மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் உள்ள ஆறுகாணி காளிமலை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான லட்சார்ச்சனை நேற்று(ஏப்.21) நடைபெற்றது. இந்து கோயில் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற லட்சார்ச்சனையில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாமம் சொல்லி குங்குமத்தால் லட்சார்ச்சனை செய்தனர்.

News April 22, 2024

குமரி: முருகன் கோயிலில் நிலாச்சோறு விருந்து

image

குமரி மாவட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி நாளான நாளை(ஏப்.23) காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை, வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன நடக்கிறது. வெள்ளி அங்கி சார்த்தி சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நிலாச்சோறு விருந்து தொடங்குகிறது. 

News April 22, 2024

பேச்சிப்பாறை அருகே மரம் விழுந்து கார் சேதம்

image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் நேற்று(ஏப்.21) மாலை பெய்த பலத்த மழையில், சமத்துவபுரம் பகுதியில் நின்ற பலாமரம் முறிந்து விழுந்தது. அப்போது, இடலாக்குடியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கார் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பெண்கள் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர். அந்த பகுதியில் இருந்தவர்கள் சேர்ந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.

News April 20, 2024

போதையில் பாட்டியை கொலை செய்து பேரன் 

image

திருவட்டார் சாரூரை சேர்ந்தவர் தாசம்மாள் வயது( 80). இவரது மகன் புஷ்பராஜ் இறந்ததால் பேரன் அஜித் (23) தாசம்மாளுடன் வசித்து வந்தான். பெயின்ட் கடை ஊழியர் அஜித் நேற்று தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட்  சொத்தை தன் பெயருக்கு எழுதி கேட்டு போதையில் தாசம்மாளை பிடித்து தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு இறந்து போனார். இதில் பயந்த அஜித் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

News April 20, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News April 20, 2024

குமரியில் 65.46% வாக்குகள் பதிவு

image

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. அந்த வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக,
• நாகர்கோவில் – 63.29%
• குளச்சல் – 64.05%
• கன்னியாகுமரி – 69.59%
• கிள்ளியூர் – 62.93%
• விளவங்கோடு – 65.40%
• பத்மநாபபுரம் – 66.98%
என மாவட்ட அளவில் மொத்தம் 65.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

ஆர்வமுடன் வாக்களித்த குமரி கலெக்டர்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் இன்று காலை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருசடி புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

error: Content is protected !!