India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (செப்.17) மாலை 5 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளர்து. இதில் எச்.ராஜாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும், இதில் காங்கிரஸ் கட்சியினர்கலந்து கொள்ள வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழா இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் அம்மனுக்கு தங்க கிரீடம், தங்க ஆபரணங்கள் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. இரவு புஷ்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம்
அருள்மிகு ஸ்ரீஸ்தாணுமாலயன்சுவாமி திருக்கோயில்
ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில்
8 ஆம் நாள் ந்திருவிழாவான இன்று திருவேங்கடம் விண்ணவரம் பெருமாள் சுவாமி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளினார். இதில் ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

குழித்துறை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் கழிவுகள் எந்திரத்தில் அரைக்கப்பட்டு மக்கிய பிறகு குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்காத கழிவு நகராட்சி ஆணையர் ஆணையின் படி, சுகாதார ஆய்வாளர் அறிவுரையின்படி, விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை இன்று செட்டி நாடு சிமெண்ட் ஆலைக்கு 12 MT அனுப்பி வைக்கப்பட்டது.

மருதம் கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தியின் சிலையை சமூக விரோதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்தினார். காவல்துறை அதிகாரிகள் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர் ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத் பட் இன்று அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் இன்று(செப்.16) மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நமது இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அன்பு ஈகை சகோதரதத்துவம் ஆகியவற்றை நபிகள் நாயகம் போதித்து மக்களை நல்வழியில் நடத்தினார். அதை பின்பற்றி நாம் வாழ்வதே நாம் செலுத்தும் காணிக்கை. இல்லாதவர்களுக்கு இயன்றவரை நாம் உதவிகள் செய்வோம் என்று அதில் அவர் கூறியுள்ளார்

மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு இன்று மாலை பேச்சிப்பாறை அரசு பள்ளி +2 படிக்கும் மாணவி அபிநயா அவளது தோழியுடன் வந்துள்ளார். திடீரென அவர் மாத்தூர் தொட்டிப் பாலத்தில் 70 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். தனது தோழி, அபிநயாவை தவிர்த்ததால் மனமுடைந்து தற்கொலை செய்ததாக போலீசார் கூறினர்.

நெட்டாங்கோடு ஸ்ரீ ராம் இளைஞர் மன்றம் சுமார் ரூ.50 லட்சம் செலவில் அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. இதனை எம்.ஆர் காந்தி எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பாஜக துணை தலைவர் குமரி பா.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கட்டிடம் டியூசன் சென்டராக, கோசிங் சென்டராக, செயல்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் இன்று (செப் 15 ) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பக்தர்கள் கோவிலுக்கு வழங்கும் நன்கொடையை தனி நபரிடம் வழங்க வேண்டாம்; கோவில் நிர்வாகத்திடம் நன்கொடைகளை வழங்கி முறையாக ரசிது பெற்றுக் கொள்ள வேண்டும்; தனியாரிடம் நன்கொடை வழங்குவதால் முறையாக கோவிலுக்கு அந்த நன்கொடை செல்வதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

குமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண்கள் கைகாட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்றதை தொடர்ந்து, இளைஞர்கள் சிலர் பின்னால் சென்று, பஸ்சை தடுத்து நிறுத்தி டிரைவரை அறிவுறுத்திய சம்பவம் வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து டிரைவர் ஸ்டீபன் மற்றும் கண்டக்டர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.