Kanyakumari

News September 19, 2024

ஆவின் பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம்

image

ரங்கசாமி என்பவரின் மகனுக்கு புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கி தருவதாக கூறி குமரி ஆவின் இளநிலை செயலாளர் அய்யப்பன், கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் ஜெயபழனி உள்பட 4 பேர் ரூ.30 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அய்யப்பன் மற்றும் ஜெயபழனி ஆகிய 2 பேரையும் பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News September 19, 2024

சார்பதிவாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க தீர்மானம்

image

குளச்சலில் நேற்று அனைத்து கட்சியின் ஆலோசனை கூட்டம்   சி.பி.ஐ.எம்.எல். அந்தோணிமுத்து தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் நசீர்,காங், நகர தலைவர் சேகர், அதிமுக நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், இந்திய தேசிய காங்கிரஸ் லாரன்ஸ்,SDPI கட்சியின் குளச்சல் தொகுதி தலைவர் நிசார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் சார் பதிவாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News September 18, 2024

போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க எஸ்பி அறிவுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இன்று நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரியை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு காவல்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

News September 18, 2024

அப்டா சந்தை காய்கறி விலை நிலவரம்

image

நாகர்கோவில் அப்டா சந்தை விலை நிலவரம் பின்வருமாறு:-கத்தரி ரூ.50, வெண்டை ரூ.18, தக்காளி ரூ.30, பூசணி ரூ.6 பாகற்காய் ரூ.25, புடலை ரூ.30, மிளகாய் ரூ.50, மாங்காய் ரூ.120, வெள்ளரிக்காய் ரூ.30, சீனி அவரைக்காய் ரூ.25, நார்த்தங்காய் ரூ.50, நெல்லி, ரூ.50, முருங்கைக்காய் ரூ. 40, சாம்பார் மிளகாய் ரூ.200, தேங்காய் ரூ.38 மட்டிப்பழம் ரூ.80, செவ்வாழை ரூ.65, ரசகதலி ரூ.70 -க்கு விறக்கப்படுகிறது.

News September 18, 2024

மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை; மகனை சிறைக்கு அனுப்பிய தாய்

image

இரணியலை சேர்ந்த (47) தொழிலாளிக்கு 13 வயது மகள் உள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில்தனியாக இருக்கும்போது சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் இது குறித்து சிறுமி பாட்டியிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாட்டி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதை தொடர்ந்து தொழிலாளி நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 18, 2024

கல்லூரி பஸ் மோதி ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

image

புத்தன் துறை மீன்பிடித்தொழிலாளர்கள் ஜாண் (49), சகாய ஜஸ்டின் (44). கடந்த 16ம் தேதி இருவரும் மீன்பிடி படகில் பொருத்தும் மோட்டாருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது கல்லுக்கட்டி பகுதியில் வைத்து தனியார் கல்லூரி பஸ்சை ஓவர்டேக் செய்தனர். இதில் விபத்து நேரிட இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜான் சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜாக்க மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News September 18, 2024

மின்சார சுடுகாடு அமைக்க தளவாய் சுந்தரம் எதிர்ப்பு

image

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட காரியம் கோணம் கிராமத்தில் மின்சார சுடுகாடு அமைக்கும் திட்டத்தை மக்கள் எதிர்ப்பதால் கைவிட வேண்டும். இங்கு அனைத்து சமுதாயத்தில் தனித்தனியாக சுடுகாடு, இடுகாடு வசதி உள்ளது. மேலும் சற்று தொலைவில் உள்ள புளியடி பகுதியில் மின் தகன மேடை உள்ளது. எனவே மக்கள் எதிர்ப்பை மீறி மின்சார சுடுகாடு அமைக்ககூடாது என அவர் கூறியுள்ளார்.

News September 17, 2024

குமரி எல்லையில் நிபா வைரஸ் சோதனை

image

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாா். அதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது. கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளையில் நாளை முதல் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

News September 17, 2024

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

குருந்தன்கோட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒர்க் ஷாப்பில் பணிபுரிகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வந்த வேன் ஆனந்த் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News September 17, 2024

குமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

மருதங்கோடு ஊராட்சியில் கோணம் (கேந்திரம்) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் திருவுருவ சிலை மற்றும் மண்டபத்தை சேதப்படுத்திய தேசவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் கழுவன்திட்டை ஜங்ஷனில் இன்று(செப்.17) மாலை நடைபெற உள்ளது. விளவங்கோடு MLA தாரகை கத்பர்ட் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!