India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடமிருந்து 38 ஆயிரம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது. தேவைக்கேற்ப பால் கொள்முதல் செய்து 23,500 லிட்டர் பால் வரை தினசரி விற்பனை செய்யப்படுகிறது. தினசரி ரூ.1.4 லட்சம் மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனையாகிறது என மாவட்ட ஆட்சியர் நேற்று (செப்.19) தெரிவித்தார்.

குமரி மாவட்ட வனத்துறையில் தற்காலிக பணிக்கு பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை வரும் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று(செப்.,20) தெரிவித்துள்ளார். முற்றிலும் தற்காலிகமான வேலை வாய்ப்பு இது என்றும், பணிக்காலம் 12 மாதங்கள் என்றும், பணிக்காலத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1982ஆம் ஆண்டு பள்ளிகளில் சத்துணவு திட்டம் துவங்கப்பட்டது. சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய் 20 கிராம் கொண்டைக் கடலை, வெள்ளிக்கிழமை 20 கிராம் உருளைக்கிழங்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. 5 நாட்கள் வேக வைத்த முட்டை வமுங்கப்படுகிறது. 2023-24 கல்வி ஆண்டில் குமரி மாவட்டத்தில் 664 பள்ளிகளில் 67 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அழகன்பாறை அருள்ராஜ் மகள் அருள் ஜாஸ்மின்(24) மருத்துவமனையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், ஆஸ்பத்திரியில் விடுமுறை சொல்கிறேன் என கூறிவிட்டு ஸ்கூட்டரில் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் தந்தையை தொடர்புகொண்டு தன்னை தேடவேண்டாம், ஸ்கூட்டர் லெஷ்மிபுரத்தில் உள்ளது என கூறி மாயமாகி உள்ளார். குளச்சல் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

குமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் உங்கள் மகன், மகள் பெயரைச் சொல்லி ஸ்காலர்ஷிப் வந்துள்ளது என்று கூறி செயலிகள் மூலம் மோசடி செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகின்ற அக்டோபர் 3 அன்று தொடங்குகிறது. இந்ததிருவிழா 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வாகன பவனி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.10 ஆம் திருவிழாவான அக்.12 பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் கடலில் அம்மனுக்கு ஆளட்டும் கிழக்கு வாசல் திறப்பும நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை மத்திய அரசு ஏற்கனவே அணுக்கழிவு குப்பைத் தொட்டிபோல பாவிப்பதாகவும், தற்போது அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்வது கண்டத்திற்குரியது என பூவுலகின் நண்பர்கள் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி புதிய பஸ் நிலையம் செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கம் உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தில் நாளை மறுநாள் (செப்.21) இந்திய கலங்கரை விளக்க தினத்தையொட்டி அன்று ஒருநாள்மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கன்னியாகுமரி கலங்கரை விளக்க பொறுப்பாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில் – கொச்சுவேளி பயணிகள் ரயிலை நிலம்பூர் எக்ஸ்பிரஸாக மாற்றும் திட்டத்தால் சாதாரண பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என மாவட்ட பயணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி-சென்னை-ஜபல்பூர் சிறப்பு ரயில் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாகர்கோவில் சந்திப்பில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இரவு 11. 15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 11:15 மணிக்கு செஇகிறது. வருகிற 22 ஆம் தேதி முதல் இந்த ரயில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என நாகர்கோவிலில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.