Kanyakumari

News September 21, 2024

யாரும் அகற்றப்பட மாட்டார்கள்: IREL விளக்கம்

image

குடியிருப்பு பகுதி, பொதுபயன்பாட்டில் உள்ள பகுதி & தனிநபர் வசிக்கும் பகுதிகளில் கனிமங்கள் நிறைந்த மண் எடுக்கப்பட மாட்டாது. மாறாக, காலி நிலப்பரப்பில் அந்தந்த இடத்தின் உரிமையாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே கனிமங்கள் எடுக்கப்படும். யாரும், எந்த இடத்தில் இருந்தும் மாற்றப்பட மாட்டார்கள் என IREL விளக்கம் தந்துள்ளது. அணுக்கனிம சுரங்கம் தொடர்பாக பிரச்னை எழுந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News September 21, 2024

குமரியில் பரவும் காய்ச்சல்?

image

குமரி மாவட்டத்தில் தற்போது ஒருவித வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன் மருத்துவர்களை அணுகி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் காய்ச்சலால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், முகக்கவசம் அணிந்து கொள்வதுடன் கைகளை கழுவி சுத்தமாக இருக்கவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News September 21, 2024

ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க தடை இல்லா சான்று

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏவிஎம் கால் வாயை தூர்வாரி குப்பைகளை அகற்ற ரூ.38 லட்சம் செலவில் குளச்சல் நகராட்சியால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் நீரோடி முதல் இறையும் மன்துறை வரை ஏவி.எம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மூலம் கொல்லங்கோடு நகராட்சிக்கு தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது என நீர் வள ஆதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 21, 2024

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி

image

தெருவுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின். எம்.எஸ்.சி பட்டதாரியான இவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடற்படையில் பணிபுரியும் ரவி, இம்மானுவேல் ராஜ்குமார் மற்றும் ஹரிகரமோர் ஆகியோர் ரூ.17 லட்சம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மெர்லின்கருங்கல் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 21, 2024

அணுக்கனிம சுரங்கத்தை ரத்து செய்ய 1000 மனுக்கள்

image

குமரி மாவட்டத்தில் 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுகனிம சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையான 48 கடலோர கிராம பெண் பிரதிநிதிகள் அணுகனிம சுரங்க திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய, மாநில அரசுகள் அனுமதியை ரத்து செய்யவும், இந்தியஅரிய மணல் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு 1000 மனுக்களை வழங்கினர்.

News September 21, 2024

கவர்னர் வருகையை முன்னிட்டு 800 போலீஸார் குவிப்பு

image

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி நாளை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நாகர்கோவில் வரும் அவர் நாகர்கோவில் பயணிகள் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் திருவட்டாறில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பின் நெட்டா அருகில் உள்ள ரிசார்டில் தங்குகிறார். கவர்னர் வருகையை ஒட்டி மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News September 21, 2024

சிறந்த குறும்படத்திற்கான விருது வழங்கிய குமரி எஸ்பி

image

தமிழக காவல்துறை நடத்திய குறும்பட போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் இயக்கிய ‘BACARDI’ குறும்படம் முதல் பரிசை தட்டி சென்றது. குறும்படத்திற்கான முதல் பரிசினையும் விருதையும் காசோலையும் கார்த்திக் ராஜாவுக்கு குமரி மாவட்ட கண்காணிப்பாளர் தசுந்தரவதனம் இந்து கல்லூரியில் வைத்து வழங்கி கௌரவித்தார்.

News September 20, 2024

குறும்பட போட்டியில் பரிசு வழங்கிய எஸ்பி

image

குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பெண்களுக்கான இணைய வெளி பாதுகாப்பு என்ற தலைப்பில் குறும்பட போட்டி கடந்த மாத நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு எஸ்பி சுந்தரவதனம் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழை இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 20, 2024

குமரி அருகே போராட்டம் அறிவிப்பு

image

குமரி, மணவாளகுறிசியில் ‘இந்திய அரிய மணல் ஆலை’ மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆலை மூலம் கடலோரப் பகுதிகளில் கனிம வளத்திற்காக மணல் எடுக்க அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் வர உள்ளதாகவும் கூறப்டுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூத்துறையில் வரும் 22ஆம் தேதி காலை 8:30 மணிக்கு இது சம்பந்தமாக அறவழி போராட்டம் நடத்தவிருப்பதாக அப்பகுதி மீனவ மக்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

News September 20, 2024

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

image

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் அழகுமீனா ஆலோசனை மேற்கொண்டார். குமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சிறுக முறை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

error: Content is protected !!