India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு; 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 16.43, 16. 53, அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44. 82 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 68.96 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 16.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.9 அடி நீரும் இருப்பு உள்ளது.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 61 நாள்கள் தடைகாலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுக்கு கேரை , விளைமீன் , பாரைமீன் , நவரை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது. நேற்று ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மீன் விற்பனை நடந்துள்ளது. கேரளா வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். மீன்களின் வரத்து குறைவால் விலையும் கிடு கிடுகிடுவென உயர்வு.
குமரி அறிவியல் பேரவை சார்பில் 2024-2025-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரம்பரிய கலைநுட்பங்கள் பற்றிய ஆய்வு நிகழ்ச்சியாக இளம் விஞ்ஞானி மாணவர்கள் குமரி அறிவியல் பேரவை தலைவர் வேலையன் தலைமையில் வைரவன்பட்டி பகுதியில் இன்று (ஜூன்-16) ஆய்வு மேற்கொண்டனர்.
சின்னமூட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 மாத இடைவெளிக்கு பிறகு கடலுக்குசென்ற விசைப்படகு மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்தனர். ஏலக்கூடத்தில் மீன்களின் வரத்து குறைந்த நிலையில் மீன்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோழிச்சாலை ஒரு கூடை ரூ.3,500க்கும், பாறைமீன் ஒரு கூடை ரூ.4,500க்கும் ஏலம் போனது நவறைமீன் கிலோ 300க்கும், தோல்கிளாத்தி கிலோ 250க்கும் விற்பனையானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் வாகன பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன். 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,917 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 681 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி- சென்னை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி சென்னையில் வரும் 20-ந் தேதி இரட்டை ரயில் பாதையை நாட் டுக்கு அர்ப்பணிக்கிறார் . மேலும் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ரெயில் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் மூம்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தாணுமாலயன் சுவாமிகோவிலில் 40 வருடத்திற்கு முன்பு பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகள் சேதமடைந்தது. தற்போது 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று கோவில் மேல் தளத்தில் புதிய தரை ஒடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை 300 க்கும் மேற்பட்ட விசைப்படைகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து விட்டு நேற்று இரவு 9 மணிக்கு பின் கரை திரும்பினர். 2 மாதங்களுக்கு பின் கடலுக்கு சென்றது மீன குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேல்புறம் வட்டத்தில் 1170 ஹெக்டரில் சாகுபடி செத்துள்ள தென்னைகளுக்கு பல்வேறு நோய்கள் வருவது குறித்து ஆய்வு செய்ய முனைவர் கோவிந்தராஜன் தலைமையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தை சார்ந்த மூன்று விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், தென்னை வேர் வாடல் நோயின் அறிகுறிகள் மற்றும் தீவிரம் குறித்து ஆய்வு செய்தல் அவர்களுடன் தோட்டக்கலை துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பேராய மாமன்ற நிர்வாகிகள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தேர்தலில் பொருளாளராக டாக்டர் ஜெயஹர் ஜோசப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக செயலாளர் சிவபாலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் பேராய மாமன்ற உறுப்பினர்கள் அருட்திரு டேனியல் தேவதாசன் , ஆபிரகாம், வேதணி , ஜோசப் ராபின், ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.