India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி, நாகர்கோவில் அடுத்த மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயூதப்படை குடியிருப்பில் வசிக்கும் காவலர் சில்வான் என்பவரது வீட்டில் இன்று மூன்றரை பவுன் நகை கொள்ளை நடந்துள்ளது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர்கள் மட்டுமே குடியிருக்கும் காவலர்கள் குடியிருப்பில் நகைகள் திருட்டு போன சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் அருகே நேற்று திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இதில் மேக்கோடு இலந்தைவிளை பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் ஜெரின் (17) படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் நேற்று (மே.23) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேச்சிப்பாறை பகுதியில் 8 செ.மீட்டரும், அடையமடையில் 6 செ.மீட்டரும் சித்தாறு-I, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, பாலமோர், மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் முள்ளங்கினாவிளை, திற்பரப்பு, மைலாடி, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி, தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செண்பகராமன் புதூர் ஊராட்சி கட்டளைகுளம் அருகே செயல்பட்டு வரும் பன்றிபண்ணைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொண்டு சென்ற மினி லாரி தோவாளை சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.24) மதியம் 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.42, 13.51 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.64 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 53.6அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 5.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.6 அடி நீரும் இருப்பு உள்ளது.
குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று (மே.24) தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. வைகாசி திருவிழாவையொட்டி இன்று காலை தலைமை பதியில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து அய்யா வைகுண்டர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.24) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.