Kanyakumari

News September 24, 2024

குளித்துறை நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

image

குளித்துறை நகராட்சி பகுதிகளில் 2009 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய 31.12.2024 ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. ஆதலால் குழித்துறை நகராட்சி பிறப்பு, இறப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்யுமாறு குழித்துறை நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 23, 2024

கருத்து கேட்பு கூட்டத்திற்க்கு எதிர்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் தாது மணல் பிரித்தெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால் புற்றுநோய், தோல்நோய் அதிகமாக பரவும் என்று தெரிந்தும், அணு கனிம சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக இன்று (செப்-23) மனு கொடுக்கப்பட்டது.

News September 23, 2024

எச்.ராஜா மீது வழக்குப் பதிய எஸ்பியிடம் காங்., மனு

image

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்., தலைவர் நவீன் மற்றும் காங்கிரசார் எஸ்.பி.யிடம் இன்று மனு கொடுத்தனர். அதில் எச்.ராஜா, ராகுல் காந்தி குறித்து பேசுவது அதிர்ச்சியை தருகிறது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

News September 23, 2024

நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதலில் 8 பேர் காயம்

image

குறும்பனையைச் சேர்ந்த மீனவர்கள்நேற்று மாலை தேங்காய்பட்டினம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இணையம் புத்தம் துறையைச் சேர்ந்த மீனவர்கள் 6 படகுகளில் வந்து சாஜூக்கு சொந்தமான படகை சூழ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மீனவர்களின் செல்போன், ஜி.பி.எஸ் ஒயர்லெஸ் மற்றும் கருவிகள் கடலில் வீசப்பட்டன. இதில் குறும்பனையைச் சேர்ந்த 8 மீனவர்கள் காயமடைந்தனர்.

News September 23, 2024

கன்னியாகுமரி – மங்களூர் ரயில் இயக்க கோரிக்கை

image

திருவனந்தபுரம் -மங்களுர் மற்றும் நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் ரயிலை இணைத்து ஒரே ரயிலாக கன்னியாகுமரி –மங்களுர் என்று இயக்க வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.

News September 23, 2024

நாகர்கோவில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

image

பொது துறைகளை தனியாருக்கு விற்கக்கூடாது. சம வேலைக்கு சம ஊதிய சட்டம் அமல்படுத்த வேண்டும். போராட்ட உரிமையை அமல்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட தொழிற்சங்கங்கள்(சி.ஐ.டி.யு., எம்.எல்.எப்., & எல்.பி.எப்.) சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News September 23, 2024

குமரி வரும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

image

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து குமாரகோவில் முருகன், தேவாரக்கெட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் அக்.,1ஆம் தேதி ஊர்வலமாக புறப்பட்டு 3ஆம் நாள் திருவனந்தபுரம் அடையும். இந்நிலையில், பத்மநாபபுரம் அரண்மனையில் நடக்கும் உடைவாள் மாற்றுதல், விக்ரக புறப்பாடு நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், 2 மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

News September 23, 2024

அணு கனிம சுரங்கம்: விஜய் வசந்த் MP வலியுறுத்தல்

image

விஜய் வசந்த் MP நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் சந்தேகங்களுக்கு அரசு உரிய பதிலளிக்க வேண்டும். அச்சத்தை போக்குவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். கடல் மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும்போது ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா என்பதை குறித்து ஆராயவேண்டும் என கூறியுள்ளார்.

News September 23, 2024

முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து அதிமுக நிர்வாகி தாக்கு!

image

அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பசலியான் நசரேத் நேற்று(செப்.,22) அறிக்கை வெளியிட்டார். அதில், தெலங்கானா முதல்வர், கர்நாடக தொழில்துறை அமைச்சர் ஆகியோர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு ஈர்த்த நிலையில் தமிழக முதல்வர் 17 நாள் சுற்றுப்பயணம் செய்து ரூ.7,616 மட்டுமே முதலீடு ஈர்த்துள்ளது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

News September 23, 2024

குமரி வருகை தரும் மத்திய அமைச்சர் எல்.முருகன்

image

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று(செப்.,23) குமரி வருகை தர உள்ளார். அவர் கலந்து கொள்ளவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!