Kanyakumari

News May 27, 2024

டாஸ்மாக் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

image

தெங்கம்புதூர் பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (37) (டாஸ்மாக் ஊழியர்). நேற்று முன்தினம் இவரது வீட்டு முன் சந்தேகப்படும் வகையில் நின்றவர்களிடம், ஏன் இங்கு நிற்கிறீர்கள்? என சரவணன் கேட்டதும் மூவரும் அவரை தாக்கி அரிவாளால் வெட்டினர். காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரி கிருஷ்ணன், ஹரீஷ், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

News May 27, 2024

ஞாயிற்று கிழமையும் ரேஷன் பொருள் சப்ளை

image

உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் ஞாயிற்றுக் கிழமையும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையும் குமரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. பொதுமக்கள் பலரும், ரேஷன் பொருட்களை வாங்கி சென்றனர். பல கடைகளில் பருப்பு, பாமாயில் இருப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். அவை இருப்பு வைக்க வேண்டும் என்றனர். 

News May 26, 2024

பெண்கள் புகார் மீது ரகசிய விசாரணை: எஸ்.பி

image

குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, இளம்பெண்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பரப்பபோவதாக பணம் கேட்டு மிரட்டும் புகார்கள் குறித்து பெண்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப் படும். இது பற்றி ரகசியமாக விசாரணை நடத்தப்படும் என்றார். 

News May 26, 2024

போதை பொருள் விற்பனை பற்றி தகவல் தெரிவிக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது ரமணா படத்தில் வரும் காட்சியுடன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மீம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கஞ்சா குட்கா போதை பொருட்கள் விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் 70103-63173 என்ற எண்ணுக்கு காலை 7 முதல் மாலை 6 மணி வரை தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

News May 26, 2024

உயர் நீதிமன்ற நீதியரசர் குமரிக்கு வருகை

image

குமரி மாவட்டம்
மாவட்ட தலைமை நீதிமன்றம் மற்றும் வளாகத்தை பார்வையிட உயர்நீதிமன்ற நீதியரசர் விஜயக்குமார் நேற்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு நீதியரசரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

News May 25, 2024

குமரி: அடுத்த 3 நாள்களுக்கு எச்சரிக்கை!

image

குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு (மே.25-27) பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News May 25, 2024

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

image

தேசிய அளவில் வீர, தீர செயல்புரிந்தோருக்கு 2023-ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கபடுகிறது. 2021 முதல் 2023 வரை சாகசம் செய்தவர்கள் விண்ணப்பத்தை https://awards.gov.in -ல் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நாகர்கோவில் விளையாட்டு அலுவலகத்தில் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகவலுக்கு 04652 262060 என்ன எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (25.5.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 25, 2024

குமரியில் 10 செ.மீ மழைப்பதிவு!

image

கன்னியாகுமரியில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மைலாடியில் 10 செ.மீட்டரும், மாம்பழத்துறையாற்றில் 9 செ.மீட்டரும், அணைகெடங்கு, பாலமோர், துக்களாய் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், கொட்டாரம், நாகர்கோயில், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், முள்ளங்கினாவிளையில் 6 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 25, 2024

குமரி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாகர்கோவில்-மங்களூரு இடையே பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிது. இந்த ரயில் தினமும் காலை 4.15 மணிக்கு நாகர்கோயிலில் இருந்து புறப்பட்டு, இரவு 9.10 மணிக்கு மங்களூருவை அடையும். மங்களூருவிலிருந்து காலை 5.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இந்த ரயில் சேவை ஜூலை வரை நீட்டிக்கப்படுவதாகவும், பெட்டிகளின் எண்ணிக்கை கூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!