Kanyakumari

News June 21, 2024

“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” – ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்திற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.9,32,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து செடிகளான வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்றவை அடங்கிய தொகுப்பு ரூ.15/ விலையில் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக விண்ணப்பித்து செடிகளை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

போதைப்பொருள் – அலுவலர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் கள்ள சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஜூன் 21) கலந்தாய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 21, 2024

இலவச மாதிரி தேர்வு – ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 1 முதனிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாநில அளவில் இலவச மாதிரி தேர்வானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக ஜூன் 24, 27, மற்றும் ஜூலை 2,5 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

குமரி மக்களே ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டமானது ஜூன் 27ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பிப்ரவரி 2024 அன்று பெறப்பட்ட விவசாயம் தொடர்பான அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 21, 2024

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது

image

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு இன்று (ஜூன் 21) கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களிலும் 10 முதல் 15 அடி உயரத்தில் ராட்சத அலை சீற்றத்துடன் வீசியது.
அதேவேளையில், வங்கக்கடல் நீர்மட்டம் மட்டும் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

News June 21, 2024

இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

குலசேகரம் ராமகிருஷ்ணா அறிவியல் மருத்துவ கல்லூரியில் ஜூன் 23ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ,நர்சிங், பொறியியல் படித்த, இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

News June 21, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ள சீர்மரபினர் இந்த வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். பழைய உறுப்பினர்கள் புதுப்பித்து கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

News June 21, 2024

ஆம்னி பஸ்கள் பறிமுதல்

image

பிற மாநில பேருந்துகள் தமிழகத்துக்குள் முறையாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்டு வருவதாக புகார் வருவதை தொடர்ந்து, புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளது. அந்த அடிப்படையில் நேற்று கன்னியாகுமரி, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் சுற்றி வருவதை அதிகாரிகள் கண்காணித்தனர். இதையடுத்து அப்படி சுற்றி வந்த 5 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News June 21, 2024

குமரிக்கு 2,200 டன் ரேஷன் அரிசி

image

கன்னியாகுமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆந்திராவில் இருந்து 2,200 டன் ரேஷன் அரிசி மூடைகள், ரயில் மூலம் 45 வேகன்களில் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

News June 21, 2024

குமரியில் இலவச கருத்தரங்கம்

image

குமரி மாவட்டம் நீதிபதி தேர்வு எழுதுவோருக்கு இலவச கருத்தரங்கம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள செலஸ்டின் லா அகாடமியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி வாழ்த்துரையாற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

error: Content is protected !!