Kanyakumari

News May 31, 2024

ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி பொறியாளர் சஸ்பென்ட்

image

நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியம்.  பல்வேறு பணிகளில் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியிழப்பு ஏற்படுத்தியதாக ஏற்கனவே தணிக்கை துறை அதிகாரிகள் இவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தனர். அதற்கு உரிய விளக்கமளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யபட்டார்‌.

News May 31, 2024

கன்னியாகுமரி ஆதிகேசவ பெருமாள் கோயில் சிறப்புகள்!

image

கன்னியாகுமரியில் திருவட்டாறு ஊரில் அமைந்துள்ளது பழைமையான ஆதிகேசவபெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் 76ஆவது தலமான இக்கோயில் 13 மலைநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டுள்ளது. 22 அடி நீளம் கொண்ட மூலவர் சிலை, 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் எனக் கூறப்படுகிறது. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்ற மூன்று நிலைவாயில்கள் உள்ளன.

News May 31, 2024

சூரிய நமஸ்காரம் செய்தார் பிரதமர் மோடி

image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று குமரிக்கு வருகை தந்தார். இன்று 2-வது நாளாக தியானத்தை தொடர்ந்து வரும் அவர் காலை சூரிய உதயத்தின் போது சூரிய பகவானை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்தார். இவரது தியானத்தை முன்னிட்டு உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News May 31, 2024

சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை

image

குமரியில் பிரதமர் தியானத்தில் இருப்பதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு போலீசாரின் சோதனைக்கு பிறகு சுற்றுலாவினர் அனுமதிக்கப்படுவர். காந்தி மண்டபம், கடற்கரை, திரிவேணி சங்கமம் என அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளை திறக்கலாம். சில விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி இல்லை. விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்பட எல்லா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்லலாம் என கன்னியாகுமரி காவல்துறை அறிவித்துள்ளது. 

News May 31, 2024

முன்னாள் மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

image

பிரதமர் மோடியை வரவேற்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி வந்தார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்திறங்கும் அரசு விருந்தினர் மாளிகை அருகே அவரும், பா.ஜனதா நிர்வாகிகள் சிலரும் வந்து நின்றனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களை காட்டி பொன். ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

News May 31, 2024

சீற்றத்துடன் காணப்படும் கடல்

image

தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான பகுதிகளில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News May 31, 2024

அய்யா வைகுண்டர் பதியில் வைகாசி திருவிழா

image

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் அருகே சுவாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அய்யா சர்ப்ப வாகனம், மயில்வாகனத்தில் எழுந்தருளினார். திருவிழாவின் 7-ம் நாளான நேற்று அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News May 30, 2024

குமரி : 3 நாட்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரியில் இன்று முதல் அடுத்து 3 நாட்களுக்கு (மே.30 – ஜூன்.1) மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் தெந்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 30, 2024

குமரி மழைப்பொழிவு விவரம்!

image

கன்னியாகுமரியில் நேற்று (மே.29) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முள்ளங்கினாவிளையில் 4 செ.மீட்டரும், பாலமோர், மாம்பழத்துறை, கோழிப்போர்விளை, அணைகெடங்கு, சின்னக்கல்லார், சுருளக்கோடு, குளச்சல், இரணியல், தக்கலை, அடையாமடை, முக்கடல் அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 30, 2024

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட வந்த 2 பேர் கைது

image

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட வந்த நந்தினியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நந்தினி மற்றும் அவரது தங்கை நிரஞ்சனாவையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு தக்கலைக்கு அழைத்து சென்றுள்ளனர். கன்னியாகுமரியில் இவர்கள் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

error: Content is protected !!