Kanyakumari

News May 22, 2024

கன்னியாகுமரி: அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமை வகித்தார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் விதி முறைகள் குறித்து அலுவலர்களிடம் எடுத்துரைத்தார்.

News May 22, 2024

குமரி : லஞ்ச ஒழிப்புத்துறை அறிவிப்பு

image

குமரி மாவட்ட பிரிவு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியதாவது, அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரோ, தகவலை நேரிலோ, கைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 9445048977, ஆய்வாளர்கள் 9498131914, 9442233856 ,9498193388 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

News May 22, 2024

அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News May 22, 2024

குமரி மீனவர்களுக்கு 3 நாட்களுக்கு எச்சரிக்கை!!

image

குமரியில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு (மே.23 – 25) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடுவதால், மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 22, 2024

குமரி : நாளை ஆரஞ்சு அலர்ட்!

image

குமரி மாவட்டத்திற்கு நாளை (மே.23) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, கன்னியாகுமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பதிவாகக் கூடும்.

News May 22, 2024

கன்னியாகுமரியில் 9 செ.மீ மழைப்பதிவு!

image

கன்னியாகுமரியில் நேற்று (மே.21) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொட்டாரம் பகுதிகளில் 9 செ.மீ கொலச்சல், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் 7 செ.மீ குருத்தங்கோடு பகுதியில் 6 செ.மீ எரானியல், குழித்துறை, கோழிப்போர்விளை, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் துக்களாய், முள்ளங்கினாவிளை, களியல், அடையாமடை ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும் மழைப்பதிவானது.

News May 22, 2024

பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடைமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று (22.05.3024) மாலை 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 22, 2024

குமரி: இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

திற்பரப்பில் 4வது நாளாக குளிக்க தடை

image

தொடர் மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக  திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரியும் நடைபெறவில்லை.
4வது நாளாக தடை நீடிப்பதால் திற்பரப்புக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்கவும் முடியாமல், படகு சவாரியும் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்புகின்றனர்.

News May 22, 2024

குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

குமரி மாவட்டம் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான தென் தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் அலை 0.3 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை உயரக்கூடும். மேலும் கடலில் நீரோட்டம் அதிவேகத்தோடு இருக்கக்கூடும். எனவே கடற்கரையோரம் பேரலைகள் ஏற்படக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்கும் படி குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!