India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாண்மைதுறை சார்பில் விவசாயிக்கு உளுந்து சாகுபடி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 50 சென்ட் அளவில் மட்டும் அறுவடை செய்யப்படும். முதல் பரிசாக ரூ.250000, 2 ஆம் பரிசாக ரூ.150000, 3 ஆம் பரிசாக ரூ.100000 வழங்கப்படும். இதில், குறைந்தப்பட்ச மகசூல் எக்டருக்கு 888 கிலோ. 15.03.2025-க்குள் அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அருகாமையிலுள்ள வேளாண்மை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
குமரியில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு https://padmaawards.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து வரும் ஜுன்.29-க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 04652 262060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர தொகுதியான கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவியுள்ளார். இத்தொகுதியில் இதுவரை திமுக 1 முறையும், காங்., 5 முறையும், பாஜக 2 முறையும், சிபிஎம் மற்றும் தமாக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
பிறப்பு சான்றிதழ் பெற மாவட்ட நிர்வாகம் அறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயரின்றி இருந்தார் 12 மாதங்களுக்கும் இலவசமாக பதிவு செய்யலாம். 1 – 15 வயதுக்குள் எனில் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், சான்றிதழை சார்பதிவாளர், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் 31.12.2024 -க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிமாவட்டத்தில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்- 5,46,248 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்- 3,66,341 வாக்குகள்
*நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர்- 52,721 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்- 41,393 வாக்குகள்
நடந்து முடிந்த கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் விறு விறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய் வசந்த் எம்.பி அமோக வெற்றி பெற்றார். வெற்றி சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அவர், தனது தந்தையான வசந்தகுமார் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர், அதிமுக கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் 40174 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி அவரிடம் வழங்கினார். கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் எம்.பி.யிடம், கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றிச் சான்றிதழை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பி.என். ஸ்ரீதர் வழங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அமைச்சர் மனோதங்கராஜ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வியடைந்துள்ளார். விஜய் வசந்தை எதிர்த்து போட்டியிட்ட இவர் 3,58,958 வாக்குகளே பெற்று, சுமார் 1,68,360 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். 1991 இல் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு வரும் இவர், 1996 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.