Kanyakumari

News June 10, 2024

கடலுக்கு செல்ல வேண்டாம்: கலெக்டர்

image

குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில்  பலத்த காற்று வீசுவதோடு கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. மீனவர்களும், கடலோர மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல கூடாது.

News June 10, 2024

10 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகை

image

கோடை விடுமுறை சீசனில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். இதில் 4,84,000 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்த்தனர். ஏப்ரல் மாதம் 1,43,000, மே மாதம் 1,80,300, கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60,000 சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துள்ளனர். நேற்று மட்டும் 7,600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.

News June 10, 2024

குமரியில் 266 மனுக்கள் பெறப்பட்டன

image

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 266 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர். ஶ்ரீதர் அறிவுறுத்தினார்.

News June 10, 2024

மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

image

கன்னியாகுமரி, நாகர்கோவில் வேப்பமூடு அருகே உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இன்று நோட்டு புத்தகம் மற்றும் துணிகளை துணை மேயர் பிரின்சி லதா வழங்கினார் . அப்போது மாணவ, மாணவிகளிடம் பேசுகையில், டாக்டர் அப்துல் கலாம் பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ராணி மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

அரசு பள்ளியில் ஆதார் பதிவு செய்யும் முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலமாக மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு ஆதார் பதிவு செய்யும் முகாமை துவக்கி வைத்தார்

News June 10, 2024

விடுதலை சிறுத்தைகள் போராட்டம் ரத்து!

image

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிக எடை கொண்ட டாரஸ் லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஜூன்-11) முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது. லாரிகளை ஆய்வு செய்து அனுப்பப்படும் என கலெக்டர் அளித்த உறுதியின் பேரில் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குமரி மாவட்ட செயலாளர் அல்காலித் அறிவித்துள்ளார்.

News June 10, 2024

குமரி மாவட்டத்தில் ஜூன்-11 நடைபெறுகிறது!

image

வருமான வரி துறை சார்பில் வருமான வரி செலுத்துவது சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் குமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் அமைந்துள்ள ஒய் ஆர் மஹால் திருமண மண்டபத்தில் ஜூன்-11 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தொழில், வணிக துறையினரிடம் வருமான வரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வருமான வரி செலுத்துவோரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்து விளக்கம் அளிக்கவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

News June 9, 2024

குமரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத 59883 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 47676 பேர் இன்று மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 12207 பேர் தேர்வு எழுதவில்லை என கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News June 9, 2024

லஞ்சம் வாங்கிய காவலர்கள் இடமாற்றம்: எஸ்.பி. உத்தரவு

image

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நேற்று லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆனா நிலையில், புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து குமரி மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் (இ.கா.ப) அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

News June 9, 2024

குமரி மாவட்ட அணைகள் நிலவரம்

image

 கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2  அணைகளில் முறையே 16.27, 16.37, அடி  நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45. 89 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 656 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 15. 2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16 அடி நீரும் இருப்பு உள்ளது.  

error: Content is protected !!