Kanyakumari

News June 12, 2024

போலீசாரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி

image

குமரி மாவட்டத்தில் ஜூன்.10ஆம் தேதி அன்று கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக பெண்ணை கடத்த முயன்ற மருமகன் மற்றும் கூட்டாளிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டு குமரி மாவட்ட போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு உதவியாக இருந்த கன்னியாகுமரி நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசாரை மாவட்ட எஸ்பி நேரில் பாராட்டினார்.

News June 12, 2024

தனியார் விடுதிகளுக்கு குமரி எஸ்பி அறிவிறுத்தல்

image

குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி அறைகளில் தங்க வருபவர்களின் அடையாள அட்டையை வாங்கி சரி பார்த்த பின்னர், விவரங்களை சேகரித்து அவர்களை விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும்.
அவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தனியார் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.

News June 12, 2024

விளவங்கோடு எம்எல்ஏ பதவியேற்பு

image

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற தாரகை கத்பர்ட், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வின்போது, காங். சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, குமரி எம்.பி., விஜய் வசந்தகுமார், அமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News June 12, 2024

கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் குமரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் சற்று நிமமமதி பெருமூச்சு விட்டனர்.

News June 12, 2024

குமரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேகம், போக்குவரத்துக்கு நெரிசல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News June 12, 2024

குமரி வெங்கடாஜலபதி கோயிலில் ரூ.9 லட்சம் காணிக்கை

image

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 3 பெரிய உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம்(ஜூன் 10) நடந்தது. இதில் ரூ.9 லட்சத்து 48 ஆயிரத்து 100 வசூலாகி இருந்தது. 5 சவரன் தங்க நகைகளும் காணிக்கையாக கிடைத்தன.

News June 11, 2024

அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு 

image

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் குப்பையில்லா குமரியாக மாற்றுவது குறித்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

நாகர்கோவில் அருகே பாலியல் தொழில்! கைது

image

நாகர்கோவில் ராமன்புதூர் கோல்டன் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக நேசமணி நகர் போலீசாருக்கு தகவலை சென்றது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அங்கு 40 வயது பெண்ணும், ஜெகன் ஜோஸ்(39) என்பவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிந்தது. ஜெகன் ஜோஸ் கைது செய்யப்பட்டு, பெண் காப்பகம் அனுப்பப்பட்டார். 2 புரோக்கர்களை தேடி வருகின்றனர்.

News June 11, 2024

குமரி அருகே சி.எஸ்.ஐ. மாமன்ற தேர்தல்

image

கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 2024-2027ம் ஆண்டுக்கான மாமன்ற தேர்தல் ஜூன் 13,14,15 தேதிகளில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. இந்த தேர்தலை சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ள முன்னாள் மாவட்ட நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் நடத்துகின்றனர். 

News June 10, 2024

கடலுக்கு செல்ல வேண்டாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ள கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இன்று முதல் நாளை இரவு வரை கடல் அலைகள் 2.6 மீட்டர் உயரம் வரை எழும்ப வாய்ப்புள்ளதாகவும், மேலும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள், சுற்றுலா பயணிகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் (இ.கா. ப) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!