Kanyakumari

News June 3, 2024

அய்யா வைகுண்டர் கோவில் தேர்திருவிழா

image

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாள் திருவிழா இரவு கலிவேட்டை நடைபெற்றது.  11ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

image

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போலீசார் பாது காப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் நாளை மூடப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

மாநில அளவிலான கால்பந்து போட்டி

image

குமரி மாவட்டம் மறவை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 17-ஆவது ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி மறவன்குடியிருப்பு சர்ச் விளையாட்டு மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி
மாமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி பொருளாதார பிரிவு மாவட்ட தலைவரும் ஆகிய ஐயப்பன் நேரில் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News June 2, 2024

மட்டிப் பழத்துக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்

image

குமரி மாவட்டத்தில் விளையும் சிறப்பான வாழைகளில் ஒன்று மட்டி. பார்க்க ரஸ்தாளி பழம் போல் இருக்கும் மட்டி பழம் மணமும், இனிப்பு சுவையும் மருத்துவ குணமும் கொண்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மட்டி பழத்திற்கு கடந்த ஆண்டு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற நிலையில், புவிசார் குறியீடு வழங்க உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் இன்று புவிசார் குறியீடு அமைப்பால் வழங்கப்பட்டது.

News June 2, 2024

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 4 பேர் படுகாயம்

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாநில சுற்றலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று கன்னியாகுமரிக்கு வந்த கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வேன் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து ஜீரோ பாயின்ட் அருகே பேரி காட் மீது மோதி, அருகில் நின்ற கேரள அரசு பேருந்து மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News June 2, 2024

படகு சவாரி டிக்கெட் கவுன்டர் அகற்றம்

image

கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகளை விற்க கவுண்டர் ஒன்றை எந்த வித அனுமதியும் பெறாமல் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் நேற்று குத்தகைதாரர் அமைத்து டிக்கெட் விற்பனை செய்தார். தகவல் அறிந்து திற்பரப்பு பேருராட்சி ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News June 2, 2024

ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்தவர் உயிரிழப்பு 

image

அருமனை மாத்தூர் கோணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் கேரளா மலப்புரத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மலப்புரத்தில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தார். இன்று காலை ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது ராஜேந்திரன் கீழே இறங்க முயன்றார். ரயில் நகர்ந்தால் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் உயிரிழந்தார்.

News June 1, 2024

மார்ஷல் நேசமணி நினைவு நாள் அனுசரிப்பு

image

கன்னியாகுமரி: தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News June 1, 2024

குமரி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2  அணைகளில் முறையே 16.0, 16.11, அடி  நீரும், 48 அடி கொள்ளளவு  கொண்ட பேச்சிப்பாறையில் 45.47 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட  பெருஞ்சாணி அணையில் 61 அடி நீரும்,  25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 15 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16.1 அடி நீரும் இருப்பு உள்ளது.  

News May 31, 2024

குளச்சல் : மீன் பிடி தடை காலம் இன்றிரவு ஆரம்பம்

image

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, முட்டம், குளச்சல் நீரோடி உட்பட உள்ள கடற்கரை கிராமங்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இதன்படி இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது.
தடைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப் படகுகள் குளச்சல் துறைமுகம் திரும்பி உள்ளன. அவற்றை மீனவர்கள் துறைமுகத்தில் நிறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!