India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் வந்தே பாரத் ரயிலை விட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் மோடி, முதல்முறையாக தமிழகம் வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் எம் பி நேற்று (ஜூன்-13) சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கிள்ளியூர் MLA ராஜேஷ் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ” அண்ணாமலை கூறுவது போல தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருந்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது ஏன்? மக்கள் மன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே ஒரு கட்சி பலமானதா, பலவீனமானது என்பது தெரியும். பிரதமர் அனைவருக்குமானவர். ஆனால் அவர் குறிப்பிட்ட மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்” என்றார்.
கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய முத்திரைத்தாள் சட்டத்தின் படி வருவாய் கிராமம் வாரியாக விரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பார்வைக்காக தாலுகா ஆபீஸ் ,சார் பதிவாளர் ஆபீஸ் உட்பட முக்கிய ஆபீஸ்களிலும் www.tnreginet. gov. in என்ற இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தக்கலை போலீசார் நேற்று(ஜூன் 13) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புலிப்பனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெண்ணிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது 936 கிராம் குட்கா பொருட்கள் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். புலிப்பனத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் சிந்துகுமாரி (40) என்ற அவர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பட் நேற்று(ஜூன் 13) பொதுமக்களின் அடிப்படை தேவையான ரோடு, மின்விளக்கு, குடிநீர், போக்குவரத்து விரைவில் நிவர்த்தி செய்ய அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பணியாக தேனீ வளர்ப்போர் பிரச்னையை தீர்க்க கூட்டுறவு சங்க அலுவலகத்தை பார்வையிட உள்ளேன். செண்பகதரிசில் ரோடு போட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்றும் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு (13 ஜூன் – 17 ஜூன்) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு குமரி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார், வடசேரி, தக்கலை என மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சிக்கலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு நிபுணர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளில், பிரச்னை இன்றி பணியாற்றியவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த 61 போலீஸ் ஏட்டுகள், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்து உள்ளார். பதவி உயர்வால் 61 போலீஸ் ஏட்டுகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.