Kanyakumari

News July 19, 2024

குமரியை சேர்ந்தவர் நீதிபதியாக நியமனம்

image

குமரி மாவட்டம், நாகர்கோவில் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக
இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் (ஜூலை-18) பதவி ஏற்றுக்கொண்டார்.
மிக உயரிய பொறுப்பினை வகிக்கும் நீதியரசர் மகாதேவனின் பணி சிறக்க குமரி மாவட்ட மக்கள் சமூக வலைதலங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

News July 19, 2024

4-ஆவது நாளாக குளிக்க தடை

image

குமரி மலையோர பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக (வெள்ளிக்கிழமை) நீடிக்கிறது.

News July 19, 2024

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

image

குமரி மாவட்டம், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட 20 பேர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை.18) இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 19, 2024

இன்று தொடங்கும் புனித அல்போன்சா ஆலய திருவிழா

image

நாகர்கோவில் ஆயுதப்படை சாலை அருகே உள்ள புகழ்பெற்ற புனித அல்போன்சா திருத்தல ஆலயத்தின் திருவிழா இன்று (ஜூலை.19) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிககளை நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோலாகலமாக நடைபெறும் இத்திருவிழாவானது தேர் பவனியுடன் ஜூலை 28-ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

News July 18, 2024

10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாகவுள்ளது. பல்வேறு நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

News July 18, 2024

கருணை அடிப்படையில் அரசு வேலை

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர். பி. என். ஸ்ரீதர், அங்கான்வாடி மையத்தில் பணியின் போது மரணமடைந்த இரண்டு அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உடனிருந்தனர்.

News July 18, 2024

தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை அமோகம்

image

நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால், தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். இன்று மல்லிகை பூ ரூ.400-க்கும், பிச்சி பூ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது, இன்னும் நாட்கள் செல்ல செல்ல பூ விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க மானியம்

image

நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க மானியம் அளிக்கப்படும் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ணைக்கு தேவையான கொட்டகை இதர செலவுக்காக 50% மானியத்தில் ரூ.1,56,875 அரசால் வழங்கப்படும். மீதி 50% பயனாளிகள் பங்களிப்பு ஆகும். 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!