Kanyakumari

News June 16, 2024

இரட்டை ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

image

கன்னியாகுமரி- சென்னை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி சென்னையில் வரும் 20-ந் தேதி இரட்டை ரயில் பாதையை நாட் டுக்கு அர்ப்பணிக்கிறார் . மேலும் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ரெயில் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

News June 16, 2024

தாணுமாலயன் கோவிலில் தரை ஓடுகள் பதிக்கும் பணி

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் மூம்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தாணுமாலயன் சுவாமிகோவிலில் 40 வருடத்திற்கு முன்பு பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகள் சேதமடைந்தது. தற்போது 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று  கோவில் மேல் தளத்தில் புதிய தரை ஒடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. 

News June 16, 2024

2 மாதங்களுக்குப் பின் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

image

கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை 300 க்கும் மேற்பட்ட விசைப்படைகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து விட்டு நேற்று இரவு 9 மணிக்கு பின் கரை திரும்பினர். 2 மாதங்களுக்கு பின் கடலுக்கு சென்றது மீன குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

News June 16, 2024

தென்னை மரங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு

image

மேல்புறம் வட்டத்தில் 1170 ஹெக்டரில் சாகுபடி செத்துள்ள தென்னைகளுக்கு பல்வேறு நோய்கள் வருவது குறித்து ஆய்வு செய்ய முனைவர் கோவிந்தராஜன் தலைமையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தை சார்ந்த மூன்று விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், தென்னை வேர் வாடல் நோயின் அறிகுறிகள் மற்றும் தீவிரம் குறித்து ஆய்வு செய்தல் அவர்களுடன் தோட்டக்கலை துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

சி.எஸ்.ஐ.பேராய மாமன்ற தேர்தலில் வெற்றி

image

குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பேராய மாமன்ற நிர்வாகிகள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தேர்தலில் பொருளாளராக டாக்டர் ஜெயஹர் ஜோசப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக செயலாளர் சிவபாலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் பேராய மாமன்ற உறுப்பினர்கள் அருட்திரு டேனியல் தேவதாசன் , ஆபிரகாம், வேதணி , ஜோசப் ராபின், ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.

News June 15, 2024

குமரி: சவர்மா சிக்கன் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி

image

கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 8 பேர் சவர்மா சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 15, 2024

நாளை மாரத்தான் போட்டி

image

கன்னியாகுமரி மாவட்ட தடகள அசோசியேஷன் மற்றும் மார்த்தாண்டம் கேப் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் அன்ட் சேரிட்டி ஆர்கனைசேஷன் இணைந்து நடத்தும் 21 கி.மீ மாரத்தான் போட்டி நாளை (16.6.24) மார்த்தாண்டத்தில் தொடங்குகிறது. இந்த மாரத்தான் போட்டி நாளை காலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்த மாரத்தான் போட்டியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைக்கிறார்.

News June 15, 2024

கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

image

கள்ளக்கடல் காரணமாக மீண்டும் குமரி கடலோரபகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மீனவர்களும், கடலோர பகுதியில் வசிக்கும் மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கலெக்டர் ஶ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரைகளில் கடல்சீற்றம் இயல்பை விடவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

News June 15, 2024

கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி

image

கன்னியாகுமரி கோவளம் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் தரை மட்டத்திலிருந்து 150 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்திற்கு 180 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கலங்கரை விளக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பழைய ரேடார் கருவி மாற்றப்பட்டு தற்போது 25 நாட்டிங்கல் கடல் தொலைவில் வரும் கப்பல்களை ஸ்கேன் செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்த புதிய ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

News June 14, 2024

நடிகர் கமலிடம் வாழ்த்து பெற்ற குமரி எம்.பி

image

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!