Kanyakumari

News June 17, 2024

ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்

image

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண நேற்று இன்றும் விடுமுறை தினமாதலால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் நேற்று மாலையில் சூரிய அஸ்தமத்தை காண்பதற்கு ஆர்வமாக காத்திருந்தனர். தற்போது மழை மேகம் காரணமாக சூரிய அஸ்தமனம் தெளிவாக தெரியவில்லை இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

News June 17, 2024

விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தி

image

குமரி எம்.பி. விஜய்வசந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில்
, “முஸ்லிம் உறவுகள் அனைவருக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஈகை குணம் இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டுகிறேன். இந்த நாள் தியாகத்தின் மேன்மையையும், ஈதலின் அழகையும் நமக்கு கற்று தருகிறது. அல்லாவின் திவ்ய ஒளி உங்கள் மீது பிரகாசித்து, நன்னெறி பாதையில் வழி நடத்தட்டும். “என குறிப்பிட்டுள்ளார்.

News June 17, 2024

குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்பாட்டம்

image

கலப்பு திருமணத்திற்கு ஆதரவு கொடுத்ததிற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியதை கண்டித்து திருவட்டாறு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நேற்று மாலை கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில், திருவட்டார் வட்டார குழு செயலாளர் விஸ்வம்பரன், செயலர் ஜூடஸ்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

குமரி; கல்லூரி திறப்பு தேதி வெளியானது

image

தற்போது இரண்டாம் ஆண்டுக்கு செல்லும் மாணவர்களின் கல்லூரி திறப்பு தேதி குறித்து அறிவிப்ப வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 19.6.2024 அன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்று கோணம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் அன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 16, 2024

ரவுண்டானாவில் கொடி கட்டினால் நடவடிக்கை -ஆட்சியர்

image

நாகர்கோவில் ஆட்சியரகம் பகுதியில் உள்ள ரவுண்டானாவைச் சுற்றி, கட்சி தலைவர்கள் வரும்போது கட்சியினர் கொடி தோரணங்களை கட்டி வந்தனர். இதனால் ரவுண்டானாவின் அழகு பாதித்தது. இதை தடுக்கும் வகையில் ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள் கொடிகள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆட்சியர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

News June 16, 2024

குமரி மாவட்ட அணை நீர் இருப்பு நிலவரம்

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு; 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2  அணைகளில் முறையே 16.43, 16. 53, அடி  நீரும், 48 அடி கொள்ளளவு  கொண்ட பேச்சிப்பாறையில்  44. 82 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட  பெருஞ்சாணி அணையில்  68.96 அடி நீரும்,  25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 16.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.9 அடி நீரும் இருப்பு உள்ளது.  

News June 16, 2024

குமரி: ரூ. 6 கோடிக்கு மீன்கள் விற்பனை

image

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 61 நாள்கள் தடைகாலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுக்கு கேரை , விளைமீன் , பாரைமீன் , நவரை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது. நேற்று ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மீன் விற்பனை நடந்துள்ளது. கேரளா வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். மீன்களின் வரத்து குறைவால் விலையும் கிடு கிடுகிடுவென உயர்வு.

News June 16, 2024

குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆய்வு

image

குமரி அறிவியல் பேரவை சார்பில் 2024-2025-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரம்பரிய கலைநுட்பங்கள் பற்றிய ஆய்வு நிகழ்ச்சியாக இளம் விஞ்ஞானி மாணவர்கள் குமரி அறிவியல் பேரவை தலைவர் வேலையன் தலைமையில் வைரவன்பட்டி பகுதியில் இன்று (ஜூன்-16) ஆய்வு மேற்கொண்டனர்.

News June 16, 2024

அகத்தீஸ்வரம்: மீன்கள் விலை கடும் சரிவு

image

சின்னமூட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 மாத இடைவெளிக்கு பிறகு கடலுக்குசென்ற விசைப்படகு மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்தனர். ஏலக்கூடத்தில் மீன்களின் வரத்து குறைந்த நிலையில் மீன்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோழிச்சாலை ஒரு கூடை ரூ.3,500க்கும், பாறைமீன் ஒரு கூடை ரூ.4,500க்கும் ஏலம் போனது நவறைமீன் கிலோ 300க்கும், தோல்கிளாத்தி கிலோ 250க்கும் விற்பனையானது.

News June 16, 2024

குமரியில் 1,917 பேர் மீது வழக்கு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் வாகன பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன். 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,917 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 681 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

error: Content is protected !!