Kanyakumari

News July 22, 2024

ஒரே நாளில் 388 கோரிக்கை மனுக்கள்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 388 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News July 22, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது.

News July 22, 2024

பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகள் ஆய்வு 

image

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளபெருக்கு அபாயங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்மட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். அணைகளின் மதகுகள் சீராக இருக்கிறதா என்றும், மழைமானி, நீர்வரத்து, நீர்மட்ட அளவுகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதனையும் நேரில் பார்வையிட்டு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

News July 22, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 26ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கடந்த ஜூன் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் ஆட்சித்தலைவரால் நேரில் பெறப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டுமென துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News July 22, 2024

கன்னியாகுமரியில் 200 பவுன் நகை கொள்ளை

image

நாகர்கோவில் அடுத்த வடசேரி சக்தி கார்டனை சேர்ந்த பகவதியப்பன், ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி. நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு இவரும் இவரது மனைவியும் சென்று விட்டு நேற்று (ஜூலை – 21 ) இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 லட்ச ரூபாய் மற்றும் 200 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 22, 2024

கன்னியாகுமரி ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் நாளை முதல் ஜுலை.31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், நாகர்கோவில்-தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இன்று, நாளை, 25, 29, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக எழுப்பூருக்கு சென்றடையும். இதேபோல், பல்வேறு ரயில்கள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 22, 2024

அமைச்சரை சந்தித்த கிள்ளியூர் எம்.எல்.ஏ.!

image

குமரி மாவட்டத்திற்கு நேற்று (ஜூலை-21) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வருகை தந்தார். இதையடுத்து அவரை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். மேலும் குமரி மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார். நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News July 22, 2024

குமரி கடலில் படகு சவாரிக்கு தற்காலிக தடை

image

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு சவாரி, கடலின் நீர்மட்டம் காரணமாக தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்மட்டம் சரியான பிறகு படகு சவாரி இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி, அமாவாசை போன்ற நேரங்களில் கடல் உள்வாங்குதல் மற்றும் சீற்றமாக காணப்படும் எனவும் கூறியுள்ளனர்.

News July 22, 2024

கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!