India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் வரும் 24-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை விளக்கி குமரி போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பணிமனை தலைவர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டத்தில் கனிமவளங்களை கேரளாவிற்கு அதிக பாரத்துடன் ஏற்றி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நாகர்கோயில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபுரம் சோதனை சாவடியில் போலிஸார் சோதனையில் அதிகபாரம் ஏற்றி வந்த 6 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தில் மாநில அளவிலான 16 வயதிற்குட்பட்ட மாவட்ட அணி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதில் 01.01.2008 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், படித்து கொண்டிருப்பதற்கான சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுடன் நாளை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கும் வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குன்னுவிளை , ஏ.ஆர்.கேம்ப், நடராஜபுரம், இடலாக்குடி, அரசு காலனி ஆகிய பகுதிகளில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் (UHWC) செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ நலவாழ்வு மையங்களில் ஞாயிறு தவிர பிற கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவர் பணியில் இருப்பார்கள். பொது மக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநங்கைகளுக்காக திருநங்கை அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை , வாக்காளர் அடையாள அட்டை. ஆதார் அட்டையில் திருத்தம் செய்து வழங்குவதற்காக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து (ஜூன். 21 ) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை திருநங்கைகள் அடையாள அட்டை பெறாதவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பிரதான சாலைகள் முதல் குறுகலான சாலைகள் வரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை மாநகராட்சி சார்பில் சரி செய்ய மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இதுகுறித்து பேசிய மேயர் மகேஷ், “மாநகராட்சி பகுதி அனைத்து சாலைகளில் உள்ள பள்ளங்களை பழுது பார்க்க ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று (ஜூன் 19) தொடங்கி ஓரிரு நாட்களில் நிறைவடையும்” என்றார்
குழித்துறை சிறைச்சாலையில் காலியாக உள்ள சமையல் பணியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், 18வயதில் இருந்து 37 வயது வரை இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 2 வருடத்திற்கு குறையாமல் சமையல் பணி அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பாளையங்கோட்டை மத்திய சிறை எஸ்.பி அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை அதிகமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக, 15-ம் தேதி 7 ஆயிரம் பேரும், 16ஆம் தேதி 7 ஆயிரத்து 300 பேரும், பக்ரீத் பண்டிகை நாளான நேற்று 6 ஆயிரத்து 300 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். 3 நாட்களில் மொத்தம் 20 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.