India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக மீனவர்கள் 21 பேரை சிங்கள கடற்படையினர் கடந்த ஒன்பதாம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் நான்கு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையால் கடந்த 4 மாதத்தில் 425 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு 196 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க அதிமுக மீனவர் அணி மாநில இணை செயலாளர் பசிலியான் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடுகளையொட்டி காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 30 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்சிறை முட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. மருத்துவர்கள் முகாமுக்கு வந்தவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்துகளை கொடுத்தனர்.

தாம்பரம் – நாகர்கோவில் அஞ்யோதயா ரயில் இம்மாதம் அக்.22ம் தேதி வள்ளியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். வள்ளியூரில் இருந்து நாகர்கோவில் செல்வது தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று நாகர்கோவில் – தாம்பரம் அந்தயோதயா 23ம் தேதி வள்ளியூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தடிக்காரன் கோணத்தில் 20.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கல்லாறு எஸ்டேட்டில் 10 பெருஞ்சாணி 8.4, பாலமோர் 6.2, சுருளோடு 5, புத்தன் அணை 5, சிற்றாறு 2.4, களியல் 2.2, அப்பர் கோதையாறு 2, முக்கடல் அணை 2, லோயர் கோதையார் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான இளைய வர் பிரிவு ஆண், பெண் கைப்பந்து வீரர்கள் தேர்வு அக்.,17ஆம் தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. 1.1.2002-க்குப் பின் பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அக்.,26 to 31 வரை பயிற்சி உண்டு. வேலூரில் நவ.,2 to 5 வரை நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கலாம் என கைப்பந்து கழகத்தினர் கூறினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொது மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1077, 231077, 9384056205 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் நாளை மறுநாளும் (15 மற்றும் 16) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் கன்னியாகுமரி உட்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், 20 சென்டிமீட்டர் மழை பெய் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கடலோரப் பகுதி மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் முழுமை திட்டம் தொடர்பாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் அதனை உறுப்பினர் செயலர், உதவி இயக்குநர், நாகர்கோவில் உள்ளூர் திட்ட குழுமம், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் என்ற முகவரிக்கு மின்னஞ்சலிலோ அல்லது நேரிலோ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(அக்.,13) தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொடங்கப்படும் அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கணக்கு தொடங்கிய அஞ்சலங்களில் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை புதிய மாநில தலைவர் சௌந்தரராஜன், பொதுச் செயலாளர் நியூ ராயல் பீர்முகமது ஆகியோர் நாளை(அக்.,15) மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் அப்பா மார்க்கெட் அரங்கில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட வணிகர் பேரவை பாதுகாவலர் டேவிட்சன் நேற்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.