Kanyakumari

News June 24, 2024

124 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்  மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் இன்று (ஜூன் 24) நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஈம சடங்கு உதவித்தொகை ரூ.14.25 லட்சத்தில் 25 பேருக்கும், செயற்கை அவயம் ரூ.2.81 லட்சத்தில் 37 பேருக்கும்,
முடநீக்கு உபகரணம் ரூ1.90 லட்சத்தில் 12 பேருக்கும் என மொத்தம் 124 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News June 24, 2024

வாகன எண்ணுடன் புகார் அளிக்கலாம். – எஸ்.பி.

image

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் தொடர்ந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தால் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்கு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் எச்சரித்தார். பைக் சாகசம் செய்பவர் வாகன எண்ணுடன் எஸ்பி அலுவலக எண் 04652 220167 அல்லது 100 ஐ அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.

News June 24, 2024

குமரி ஆட்சியர் கடும் எச்சரிக்கை 

image

மாவட்டஆட்சியர் ஸ்ரீதர் கூறியதாவது, ” அனுமதியின்றி மெத்தனால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா? என கண்காணிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொது மக்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண் 10581, காவல்துறை வாட்ஸ் அப் எண் 81229 30279,7010363173 எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.” என்றார்.

News June 24, 2024

போதை பொருள்கள் விற்பனை; எண் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், குமரி மாவட்டத்தில் கஞ்சா, பான் குட்கா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை 7010363173 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்ற அறிவிப்பு பலகையை இன்று நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

News June 24, 2024

குமரி: 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாயப்புள்ளதாக தகவல். தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 24, 2024

குமரிக்கு கழிவுடன் வந்த 2 டெம்போ சிறைபிடிப்பு

image

நேற்று மாலை அருமனை அருகே காரோடு மற்றும் மாங்கோடு பகுதியில்   இறைச்சி கழிவுபொருட்கள் ஏற்றி வந்த 2 டெம்போக்களை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர்.இதுபற்றி அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மஞ்சாாலு மூடு ஊராட்சி நிர்வாகம் ஒரு வாகனத்திற்கு ரூ25,000,மாங்கோடு ஊராட்சி நிர்வாகம் ரூ
ரூ 25,000 அபராதம் விதித்தது.மேலும் டெம்போக்கள் கேரளாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டது.

News June 24, 2024

குமரி: 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

image

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று(ஜூன் 24) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிட்டதக்கது.

News June 23, 2024

குமரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று ஞாயிற்றுகிழமை வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலே குவிந்தனர். அவர்கள் கடலில் இருந்து எழும் சூரிய உதயத்தை கண்டு ரசித்து, தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கடலில் கால்களை நனைத்து குடும்பத்துடன் விளையாடி வருகின்றனர்.

News June 23, 2024

குமரியில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் தற்போது பெருமூச்சு விட்டுள்ளனர்.

error: Content is protected !!