Kanyakumari

News June 24, 2024

குமரிக்கு கழிவுடன் வந்த 2 டெம்போ சிறைபிடிப்பு

image

நேற்று மாலை அருமனை அருகே காரோடு மற்றும் மாங்கோடு பகுதியில்   இறைச்சி கழிவுபொருட்கள் ஏற்றி வந்த 2 டெம்போக்களை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர்.இதுபற்றி அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மஞ்சாாலு மூடு ஊராட்சி நிர்வாகம் ஒரு வாகனத்திற்கு ரூ25,000,மாங்கோடு ஊராட்சி நிர்வாகம் ரூ
ரூ 25,000 அபராதம் விதித்தது.மேலும் டெம்போக்கள் கேரளாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டது.

News June 24, 2024

குமரி: 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

image

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று(ஜூன் 24) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிட்டதக்கது.

News June 23, 2024

குமரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று ஞாயிற்றுகிழமை வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலே குவிந்தனர். அவர்கள் கடலில் இருந்து எழும் சூரிய உதயத்தை கண்டு ரசித்து, தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கடலில் கால்களை நனைத்து குடும்பத்துடன் விளையாடி வருகின்றனர்.

News June 23, 2024

குமரியில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் தற்போது பெருமூச்சு விட்டுள்ளனர்.

News June 22, 2024

சிறுவன் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை

image

தமிழக கேரள எல்லைப் பகுதியான குமரி வெள்ளறடை பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் இன்று (ஜூன் 22) ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. வலது கை ஜன்னல் கம்பியில் கட்டப்பட்ட நிலையில், துப்பட்டாவில் ஜன்னலில் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து வெள்ளறடை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 22, 2024

பெருஞ்சாணி அணை 70 அடியை தாண்டியது

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2  அணைகளில் முறையே 16.1, 16. 2 அடி  நீரும், 48 அடி கொள்ளளவு  கொண்ட பேச்சிப்பாறையில்  44. 38அடி நீரும், 77 அடி    அணையில்  70.17 அடி நீரும்,  25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 18.7 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.8 அடி நீரும் இருப்பு உள்ளது.  

News June 22, 2024

“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” – ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்திற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.9,32,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து செடிகளான வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்றவை அடங்கிய தொகுப்பு ரூ.15/ விலையில் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக விண்ணப்பித்து செடிகளை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” – ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்திற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.9,32,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து செடிகளான வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்றவை அடங்கிய தொகுப்பு ரூ.15/ விலையில் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக விண்ணப்பித்து செடிகளை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

போதைப்பொருள் – அலுவலர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் கள்ள சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஜூன் 21) கலந்தாய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!